மின்கோபுரத்தில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு

திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது.

திருப்பூர் : திருப்பூரில் பணி நிரந்தரம் செய்ய வலியுறுத்தி உயரழுத்த மின்கோபுரத்தில் ஏறி சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேலாக தற்கொலை மிரட்டல் விடுத்த மின்வாரிய ஒப்பந்த ஊழியரால் பரபரப்பு ஏற்பட்டது. 



தாராபுரம் சாலை செட்டிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் ராஜகோபால். இவர், கடந்த 19 வருடமாக மின்வாரிய ஒப்பந்த ஊழியராகப் பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், திருப்பூர் எஸ்.வி. காலனி பகுதியில் உள்ள சுமார் 60 அடி உயரம் கொண்ட (110 கேவி) உயர் மின் அழுத்தம் உள்ள மின்கோபுரத்தில் ஏறி தனது பணியை நிரந்தரம் செய்ய வேண்டும் எனக் கூறி தற்கொலை மிரட்டல் விடுத்தார். இதனைக் கண்ட அப்பகுதி மக்கள் திருப்பூர் வடக்கு போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.



பின்னர், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார், தீயணைப்பு துறையினர் மற்றும் மின்வாரிய அதிகாரிகள் ராஜகோபாலிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, அவரது பணி நிரந்தர கோரிக்கை குறித்த பரிசீலிப்பதாக உறுதியளித்ததின் பேரில், ஒரு மணி நேரத்திற்கு மேலாக மின் கோபுரத்தில் இருந்த ராஜகோபால் கீழே இறங்கி வந்தார். பின்பு, போலீசார் விசாரணைக்காக, அவரை காவல் நிலையம் அழைத்து சென்றனர். மின்வாரிய ஊழியரே மின்கோபுரத்தில் ஏறி போராட்டம் நடத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்பட்டது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...