பெண்களுக்கான தெற்கு மண்டல வாலிபால் போட்டி 22-ல் தொடக்கம்

5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

கோவை : 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு தெற்கு மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் வரும் 22-ம் தேதியிலிருந்து 25-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

ஊரக கல்வி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை சார்பில் தென் மண்டல அளவிலான வாலிபால் போட்டிகள் கோவை நேரு விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது. 5-வது உலக பெண்கள் தினத்தை முன்னிட்டு நடைபெற உள்ள இந்த போட்டிகளில் தமிழகத்தின் பல்வேறு கல்லூரிகளைச் சேர்ந்த ஏழு அணிகள் பங்கேற்கின்றன.

சென்னை ஜேப்பியார் பொறியியல் கல்லூரி, கோவை அவிநாசிலிங்கம் பல்கலைக் கழகம், காருண்யா பல்கலைக்கழகம், ஸ்போர்ட்ஸ் ஹாஸ்டல் மைசூர், லோட்டஸ் கிளப் சின்ன தடாகம், பி.கே.ஆர். கலை அறிவியல் கல்லூரி மற்றும் திருச்சூர் செயின் ஜோசப் ஆகிய கல்லூரிகளில் இருந்து மாணவிகள் பங்கேற்கின்றனர். இந்த போட்டியின் லீக் சுற்றில் முதலிடம் பெறும் இரு அணிகள் இறுதி போட்டியில் விளையாட உள்ளன. 

இதில் முதலிடம் பெறும் அணிக்கு ரூ.20,000 மற்றும் சுழற்கோப்பையும், இரண்டாவது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.15,000, 3-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.10,000, 4-வது இடத்தைப் பிடிக்கும் அணிக்கு ரூ.5,000 பரிசாக வழங்கப்பட உள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...