மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து த.மா.க.வினர் ஆர்ப்பாட்டம்

மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர்.


திருப்பூர்: மக்கள் கோரிக்கைகளை நிறைவேற்றாத மத்திய, மாநில அரசுகளைக் கண்டித்து திருப்பூரில் தமிழ்மாநில காங்கிரசார் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தினர். 

ஜி.எஸ்.டி. வரிவிதிப்பிற்குப் பின் தமிழகத்திலும், குறிப்பாக திருப்பூரில் பின்னலாடைத்துறை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், திருப்பூரில் மக்களின் வாழ்வாதாரத்தைப் பாதிக்கும் வகையில் நடக்கும் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் இளைஞரணி சார்பில் திருப்பூர் மாநகராட்சி அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

அப்போது, பல்வேறு நிபந்தனைகளை தளர்த்தக் கோரி தொழில்துறையினர் பலமுறை கோரிக்கை வைத்தும் நிறைவேற்றப்படவில்லை என்றும், மாநில அரசு பட்ஜெட்டில் சாமானிய மக்கள் பயன்பெறக்கூடிய திட்டங்கள் எதுவுமில்லை என அவர்கள் கூறினர். 

இதேபோல, தமிழ் மாநில காங்கிரஸ் இளைஞரணி சார்பாக தமிழகம் முழுவதும் 32 வருவாய் மாவட்டங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.



இதன் ஒரு பகுதியாக நீலகிரியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, காவேரி மேலாண்மை அமைக்க வேண்டும், பெட்ரோல் மற்றும் டீசல் விலையை ஜி.எஸ்.டி.க்குள் கொண்டுவர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...