ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் தி.மு.க.,வினர் ஆர்ப்பாட்டம்

சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி: சென்னையில் தி.மு.க. செயல்தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து நீலகிரியில் போராட்டம் நடத்திய அக்கட்சியைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்தனர். 



தமிழகத்தில் ரத யாத்திரை வாகனம் நுழைவதைக் கண்டித்து பல்வேறு கட்சிகள் மற்றும் அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இதன் ஒருபகுதியாக, சட்டப்பேரவையில் ரத யாத்திரைக்கு எதிராக கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வந்த தி.மு.க.,வினர், செயல்தலைவர் ஸ்டாலினின் தலைமையில் சென்னையில் போராட்டம் நடத்த முயன்றனர். அப்போது, அவர்களை தடுத்து நிறுத்திய போலீசார், ஸ்டாலின், துரைமுருகன் உள்ளிட்ட தி.மு.க. உறுப்பினர்களைக் கைது செய்தனர்.

இந்த நிலையில், எதிர்க்கட்சி தலைவர் ஸ்டாலின் கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், ரதயாத்திரை வாகனம் தமிழகத்தில் நுழைந்ததைக் கண்டிக்கும் வகையிலும் நீலகிரி மாவட்ட தி.மு.க., சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதில், மாவட்ட துணை செயலாளர் ரவிக்குமார் மற்றும் தலைமை செயற்குழு உறுப்பினர் முஸ்தபா ஆகியோர் தலைமையில் நுற்றுக்கும் மேற்பட்டோர் உதகையில் மறியல் செய்யும் போது கைது செய்யப்பட்டனர். இதேபோல, பந்தலூர் பகுதியில் கூடலூர் சட்டமன்ற உறுப்பினர் திராவிட மணி தலைமையில் நூற்றுக்கும் மேற்பட்டோர் என மாவட்டம் முழுவதும் சுமார் 500-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...