மது போதையில் பிரச்சனை : செங்கல் சூலை தொழிலாளி படுகொலை

கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார்.

கோவை: கோவையில் மது போதையில் நண்பர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனையில் செங்கல் சூலையில் பணியாற்றும் தொழிலாளர் ஒருவர் படுகொலை செய்யப்பட்டார். 

துடியலூரை அடுத்த மாங்கரை பகுதியில் உள்ள தனியார் செங்கல் சூலையில் வேலை செய்து வருபவர்கள் முத்துகுமார், ராஜேந்திரன், ஈஸ்வரன். இவர்கள் அதே செங்கல் சூலையில் உள்ள குடியிருப்பில் குடும்பத்துடன் தங்கி வருகின்றனர். இந்நிலையில், மூவரும் நேற்று இரவு அப்பகுதியில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைக்குச் சென்று மது அருந்தினர். அப்போது, மூவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பாக மாறியது. 

பிரச்சனையில் ஆத்திரமடைந்த முத்துக்குமார், ராஜேந்திரனை தாக்கி கீழே தள்ளிவிட்டார். இதில், ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு சம்பவ இடத்திலேயே அவர் பலியானார். இது குறித்து, தகவலறிந்த துடியலூர் போலீசார் வழக்குப் பதிவு செய்து முத்துக்குமாரை கைது செய்தனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...