குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்ட பொதுமக்கள்

திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.

திருப்பூர்: திருப்பூரில் குடிபோதையில் வாகனம் ஓட்டி சாலையில் விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை முற்றுகையிட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினர்.



பெத்திசெட்டிபுரம் பகுதியில் நைஜீரியர்கள் தங்கி பின்னலாடை நிறுவனங்கள் அமைத்து தொழில் செய்து வருகின்றனர். இந்நிலையில், அப்பகுதியில் இருந்த நைஜீரியர்கள் சிலர் குடிபோதையில் வாகனம் ஓட்டி அவ்வழியே கணவருடன் வந்த கர்ப்பிணி பெண் மீது மோதி விபத்து ஏற்படுத்தினர். இதில் நிலை தடுமாறி கீழே விழுந்த இருவரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். 



மேலும், நைஜீரியர்கள் இதுபோன்ற சம்பவங்களில் ஈடுபடுவதாக கூறி விபத்து ஏற்படுத்திய நைஜீரியர்களை பொதுமக்கள் தாக்கியதோடு அவர்கள் பணிபுரியும் பின்னலாடை நிறுவனத்தை முற்றுகையிட்டும் போரட்டத்தில் ஈடுபட்டனர். 



இது தொடர்பான தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பொதுமக்களிடம் இருந்து நைஜீரியர்களை மீட்டு விசாரணைக்காக வடக்கு காவல் நிலையம் அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...