நடுரோட்டில் ஆட்டோ ஓட்டுநருக்கு சரமாரி அரிவாள் வெட்டு - வீடியோ

திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது.



திருப்பூர்: திருப்பூரில் ஆட்டோ ஓட்டுநரை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டுத் தப்பியோடியது. 

திருப்பூர் பவானி நகர் பகுதியை சேர்ந்தவர் பாலமுருகன் (23). ஆட்டோ ஓட்டுநராக பணி புரிகிறார். இவரது பாலமுருகனின் தம்பி வெங்கடேஷ் என்பவருக்கும் அதே பகுதியை சேர்ந்தவர்களுக்கும் இடையே முன் பகை இருந்ததாக தெரிகிறது. இதில் பாலமுருகனும் தலையிட்டுள்ளார். 

இந்த சூழலில், நேற்று மாலை பவானி நகர் பகுதியில் சென்ற பாலமுருகனை வழிமறித்த 8 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக அரிவாளால் வெட்டியது. இதில் முகம், தலை, கழுத்து உள்ளிட்ட இடங்களில் வெட்டுக்காயங்கள் ஏற்பட்டது. இதையடுத்து, அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் அவரை மீட்டு கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். 

இதனிடையே, அப்பகுதியில் பதிவான சி.சி.டி.வி. காட்சிகளைக் கொண்டு திருப்பூர் வடக்கு காவல் நிலைய போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...