உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள கோவில் யானைக்கு சிகிச்சையளிக்க பக்தர்கள் கோரிக்கை

சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்: சேலத்தில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ள ராஜேஸ்வரி என்ற கோவில் யானைக்கு உரிய சிகிச்சை அளிக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம் மாநகரில் பிரசித்திபெற்ற சுகவனேசுவரர் கோவிலில் ராஜேஸ்வரி என்ற 38 வயது யானை பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானை குட்டியாக வாங்கும் போதே அதன் இடதுகால் ஊனமாக இருந்துள்ளது. ஆரம்பத்தில் இந்த யானை அலங்கரிக்கப்பட்டு சாமி ஊர்வலத்தின் போது அழைத்து வரப்பட்டது. யானை வளர, வளர அதனால் நீண்ட தூரம் நடக்க முடியவில்லை. இதையடுத்து, யானை கோவில் முன்பு நின்று, அங்கு வரும் பக்தர்களுக்கு ஆசி வழங்கி வந்தது. அவ்வப்போது யானைக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் கோவில் பின்புறத்தில் உள்ள காலி இடத்தில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது.



பின்னர், கோரிமேட்டில் உள்ள கோவிலுக்கு சொந்தமான இடத்திற்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கு வைத்து பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த யானையை ஒரு பாகனும், உதவி பாகனும் பராமரித்து வருகின்றனர். இடது கால் ஊனம் காரணமாக யானை பல ஆண்டுகளாக வலது காலில் நின்றதால் தற்போது அந்த காலில் வாதம் ஏற்பட்டுள்ளது. இதனால், யானையால் நிற்க முடியவில்லை. கடந்த சில நாட்களாக ராஜேஸ்வரி யானை எழுந்து நிற்க முடியாமல் படுத்தே கிடக்கிறது. மேலும், யானை சரிவர உணவும் எடுத்துக்கொள்வதில்லை.

யானைக்கு சேலம் கால்நடை மருத்துவர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். கோவில் நிர்வாக அதிகாரிகளும் யானைக்கு அளிக்கப்படும் சிகிச்சை முறைகளைக் கண்காணித்து வருகின்றனர். யானைக்கு வழங்க வேண்டிய உணவு பொருள்கள் மற்றும் அதன் தரம், மருந்துகள் ஆகியவற்றை அலட்சியம் காட்டப்பட்டதின் விளைவாகவும், தற்போது யானை உயிருக்குப் போராடி வருகிறது.

எனவே, அவசர அவசியம் கருதி கோவை மண்டல வன கால்நடை மருத்துவர்களை உடனடியாக அனுப்பி வைத்து யானை இராஜேஸ்வரியை பரிசோதித்து உரிய சிகிச்சை அளிக்க வேண்டுமென்ற கோரிக்கை பக்தர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...