மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்க கோரி பொதுமக்கள் மனு

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

நீலகிரி: நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்குட்பட்ட மச்சிக்கொல்லி பாக்கம் சாலையை சீரமைக்கக் கோரி அப்பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.



கூடலூர் தாலூகாவிற்கு உட்பட்ட தேவர்சோலை பேரூராட்சி எல்லைக்குட்பட்ட 4-ம் வார்டு மச்சிக்கொல்லி முதல் புழம்பட்டி வரையிலான சுமார் ஒன்றரை கிலோ மீட்டர் தூரமுள்ள சாலையை சீரமைத்து 20 ஆண்டுகளுக்கும் மேலாகிறது. இதனால், அந்த சாலை தற்போது குண்டும், குழியுமாக இருப்பதால் அப்பகுதி மக்கள் நடக்கவும், வாகனங்கள் இயக்க முடியாமல் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். இந்தச் சாலை வட்டிகொல்லி, பீச்சனக்கொல்லி மற்றும் செம்பக்கொல்லி ஆகிய ஆதிவாசி காலனிகளுக்கு செல்லும் முக்கிய சாலையாக இருந்து வருவதால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள், நோயாளிகள், பணிக்கு செல்பவர்கள் பெரும் அவதிக்குள்ளாகின்றனர்.

மேலும், சாலையை சீரமைக்காமல், சீரமைக்கப்பட்டுள்ளதாகக் கூறி தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது. இதனால், அப்பகுதி மக்கள் அதிருப்தியடைந்துள்ளனர். இந்த நிலையில், பழுதடைந்துள்ள இந்த சாலையில், அரசு பேருந்து மற்றும் இதர வாகனங்கள் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி நிற்பதால் இயக்க முடியாத நிலை உள்ளதால், இந்த சாலையை உடனடியாக சீரமைத்து தரக்கோரி அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர். 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...