பொய்யான தகவலை கூறினால் மானநஷ்ட வழக்கு: ஓ.பி.எஸ்., க்கு எச்சரிக்கை

அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார்.

கோவை: அண்ணா தொழிற்சங்கத்தில் கையாடல் செய்ததாக பொய்யான தகவலை கூறினால் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மீது மானநஷ்ட வழக்கு தொடருவேன் என அண்ணா தொழிற்சங்க பேரவையின் முன்னாள் செயலாளர் சின்னசாமி தெரிவித்தார். 

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த போது அவர் கூறுகையில், "அண்ணா தொழிற்சங்கத்தை வளர்த்த என்னை எந்தவித காரணமும் இல்லாமல் தொழிற்சங்க பொறுப்பில் இருந்து நீக்கியுள்ளனர். இந்தியாவிலேயே தொழிற்சங்கத்தில் அதிகளவு பணத்தை சேர்த்த தன் மீது ஊழல் குற்றச்சாட்டு வைக்கின்றனர். அண்ணா தொழிற்சங்கத்தில் தான் பத்து லட்சம் கையாடல் செய்ததாகத் துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்ம் விளக்கம் அளித்துள்ளார். பத்து லட்சம் செலவு செய்ததற்கான கணக்கு தன்னிடம் உள்ளது. 

முதலமைச்சரின் வாய்மொழி உத்தரவின் பேரிலே பணத்தை சங்கத்திற்காக செலவு செய்தேன். மேலும், நான் ஊழல் செய்ததாகக் கூறினால் ஓ.பி.எஸ் மீது மானநஷ்ட வழக்கு போடுவேன். இவர்களுடன் இனி அ.தி.மு.க.,வில் இருக்கமாட்டேன். விரைவில் அரசியல் தொடர்பாக நல்ல முடிவு எடுப்பேன். 

நல்லவர்கள் யாரும் கட்சியில் இருக்கக் கூடாது என நினைக்கின்றனர். கொத்தடிமைகளாக இருக்க வேண்டும் என இ.பி.எஸ்., ஓ.பி.எஸ் கருதுகின்றனர். இவ்வாறு அவர் பேசினார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...