பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்ககோரி மனு

இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை: இரண்டு வருடங்களாக பயனற்று கிடைக்கும் படிப்பகத்தை திறக்க கோரி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் தலையில் புத்தகத்தை சுமந்து வந்து மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

கோவை செல்வபுரம் எல்.ஐ.சி. காலணி 76-வது வார்டு பகுதியில் கடந்த 2016-ல் பாராளுமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து ரூ.5 லட்சம் செலவில் நூலகம் அமைக்கப்பட்டது.

இந்த நூலக கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆன பிறகும் மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படாமல் உள்ளது. இது தொடர்பாக, மாநகராட்சி அதிகாரிகளிடம் பல முறை மனு அளிக்கப்பட்டும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் குற்றம் சாடினர்.

மேலும், இதனைக் கண்டிக்கும் வகையில் தலையில் புத்தகத்தைச் சுமந்த படி வந்து கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு இன்று வந்த இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.

இது குறித்து அவர்கள் கூறுகையில், "மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்காக கட்டப்பட்ட படிப்பகத்தை திறக்க காலம் கடத்துவது வேதனை அளிக்கிறது. இதற்குத் தீர்வு காணும் வகையில் பொது மக்களிடம் கையெழுத்து பெறப்பட்டு உடனடியாக படிப்பகத்தை திறக்க கோரி மனு அளித்துள்ளோம். படிப்பகத்தை திறப்பதில் கால தாமதம் ஏற்படும் பட்சத்தில் பொதுமக்களைத் திரட்டி போராட்டத்தில் ஈடுபடுவோம்." என்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...