சாக்கடை கழிவுகளை நீக்க ரோபோக்களை பயன்படுத்துங்கள்

சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கோவை: சாக்கடை கழிவுகளை நீக்க கேரள அரசு அறிமுகம் செய்துள்ள ரோபோவை தமிழகத்தில் அறிமுகம் செய்ய வலியுறுத்தி கோவையில் இன்று ஆதித்தமிழர் பேரவையினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். 



கேரள அரசு அறிமுகம் செய்துள்ள "பண்டி கூட்" (பெருச்சாளி) என்ற ரோபாவை போல் தமிழகத்திலும் கொண்டு வர வேண்டும் என்றும், சாக்கடை சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள தூய்மை தொழிலாளர்கள் அனைவரையும் "கையால் மலம் அள்ளும் தொழிலாளர்கள்" என மத்திய அரசு அறிவித்து வழங்கியுள்ள அடையாள அட்டைகளை உடனடியாக வழங்க வலியுறுத்தியும் ஆதித்தமிழர் பேரவையினர் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 



தமிழக அரசு ஆய்வுக்குழு ஒன்றை கேரளாவிற்கு அனுப்பி அங்கு எவ்வாறு ரோபோ செயல்படுத்தப்படுகிறது என்று ஆய்வு செய்ய வேண்டும் என்றும், தூய்மை தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணிகள் வழங்கி மறு வாழ்விற்கு உத்தரவளிக்க வேண்டும் என்றும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் 75-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு கோரிக்கை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...