அண்ணா அறிவாலயத்திற்கு சென்றார் கருணாநிதி

அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

சென்னை: அண்ணா அறிவாலயத்துக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி நேற்று நேற்று இரவு திடீரென வருகை தந்தார்.

தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி உடல் நலம் பாதிக்கப்பட்டு வீட்டில் ஓய்வு எடுத்து வருகிறார். அதேநேரம், கருணாநிதியின் வீடியோ காட்சிகள் அவ்வப்போது ‘வாட்ஸ்-அப்பில்’ வெளியாகும். அண்மையில் கருணாநிதி தன் கொள்ளுப் பேரனுடன் கிரிக்கெட் விளையாடுவது போன்ற வீடியோ காட்சி ‘வாட்ஸ் அப்பில்’ வெளியானது.

இந்தநிலையில், கருணாநிதி நேற்று இரவு திடீரென அண்ணா அறிவாலயத்துக்கு வருகை தந்தார்.

கோபாலபுரம் வீட்டில் இருந்து புறப்பட்டு, நேற்று இரவு 8.40 மணிக்கு அறிவாலயத்துக்கு தன்னுடைய காரில் கருணாநிதி வந்தார். அப்போது, தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின், முதன்மை செயலாளர் துரைமுருகன், முன்னாள் அமைச்சர் பொன்முடி உள்பட பலர் அவரை வரவேற்றனர்.

அறிவாலயத்தில் உள்ள தன்னுடைய அறைக்குச் சென்ற அவர், அங்கு 10 நிமிடம் இருந்தார். தன் அறையைச் சுற்றிப்பார்த்து, உற்சாகம் அடைந்த கருணாநிதி, பின்னர் அங்கிருந்து, புறப்பட்டு வீட்டிற்குச் சென்றார். ஏற்கனவே 3 மாதங்களுக்கு முன்பு கருணாநிதி, அறிவாலயத்துக்கு வந்து சென்றார். அதன் பின்னர், நேற்று மீண்டும் அவர் அறிவாலயம் வந்து சென்றுள்து குறிப்பிடத்தக்கது.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...