மின்சாரம் தாக்கியதில் பள்ளி மாணவர் பலி: விளையாடும் போது நேர்ந்த சோகம்

கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கோவை: கோவையில் தனியார் குடியிருப்புக்குச் சொந்தமான மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த மாணவர்கள் மீது மின்சாரம் பாய்ந்ததில் ஒரு மாணவர் பரிதாபமாக உயிரிழந்தார். 

கோவை உப்பிலிபாளையத்தை அடுத்த ஜி.வி. ரெசிடென்சி பகுதியில் ஆர்.ஆர்.தர்ஷன் என்ற பெயரில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இதில் சுமார் 110 குடியிருப்புகள் உள்ளது. அந்த குடியிருப்பில் வசித்து வருபவர் பாலசுப்பிரமணியம். இவரது மகன் நரேன் கார்த்திகேயன். அதே குடியிருப்பில் வசித்து வருபவர் ரவிச்சந்திரன். இவரது மகன் விஷால். 

இந்த இரு பள்ளி மாணவர்களும் நேற்று இரவு குடியிருப்பு வளாகத்தில் உள்ள விளையாட்டு மைதானத்தில் சுமார் 8 மணியளவில் விளையாடிக் கொண்டிருந்தனர்.

அப்போது, பந்து மைதானத்தின் ஓரத்தில் சென்றது. அதனை எடுக்கச் சென்ற விஷால் தவறுதலாக அங்கிருந்த மின் கம்பத்தை தொட்ட போது மின்சாரம் தாக்கியது. விஷாலின் அலறல் சத்தத்தை கேட்ட நரேன், அவரைக் காப்பாற்ற முயன்றார். அப்போது இருவரையும் மின்சாரம் தாக்கியது.

இதையடுத்து, அங்கு சென்ற குடியிருப்பு வளாக காவலாளி மின்சாரத்தை துண்டித்தார். மேலும், இது குறித்து இருவர் வீட்டிற்கும் தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் அங்கு சென்ற சிறுவர்களின் பெற்றோர்கள் அவர்களை மீட்டு பீளமேடு பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 



அங்கு இருவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நரேன் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், ஆபத்தான நிலையில் விஷாலுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்த பீளமேடு போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் விசாரணை மேற்கொண்டனர். 

அப்போது, அங்கிருந்த மின் கம்பத்தில் மின்கசிவு இருந்ததும் கம்பத்தை சிறுவர்கள் தெரியாமல் பிடித்த போது மின்சாரம் தாக்கியதும் தெரியவந்தது.

அக்கம்பத்தில் மின் கம்பத்தில் மின் கசிவு இருப்பதாக முன்னதாகவே குடியிருப்பு வளாகத்தின் உரிமையாளர் மற்றும் பராமரிப்பாளர்களிடம் புகார் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று அக்குடியிருப்பு வாசிகள் குற்றம் சாட்டிய நிலையில், வளாக உரிமையாளரான வர்ணாபூபதி என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...