உதகையில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை

உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது.

நீலகிரி: உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் 4 மணி நேரத்திற்கும் மேலாக பலத்த மழை பெய்து வருகிறது. 

நீலகிரி மாவட்டம் உதகை, குன்னூர், கோத்தகிரி, கோடநாடு பகுதிகளில் கடந்த 2 நாட்களாக மழை பெய்து வருகிறது. மழையின் காரணமாக கோடை காலத்தில் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று காலை முதலே உதகை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் வெயில் வாட்டி வந்தது. பிற்பகல் முதல் இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. சுமார் 4 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த பலத்த மழையால் தாழ்வான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது.



மேலும் பாதாள சாக்கடையில் இருந்து சாலைகளில் கழிவு நீர் வெளியேறியதால் பாதசாரிகள் மிகவும் சிரமத்திற்கு ஆளாகினர். படகு இல்ல சாலை சீரமைக்கப்படாமல் குண்டும், குழியுமாக இருப்பதால் மழை நீர் தேங்கி நின்றது. இதனால், வாகன ஓட்டிகள் அவதியடைந்தனர்.

தற்போது பெய்து வரும் மழையால் காய்கறிகள் மற்றும் தேயிலை விவசாயத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

உதகை நகரின் மைய பகுதியில் ஓடும் கோடப்மந்து கால்வாய் முறையாக தூர்வாரப்படாததால் வெள்ள நீர் குடியிருப்பு பகுதிகளுக்குள்ளும், சாலைகளிலும் புகுந்ததால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகினர். தென்மேற்கு பருவமழை துவங்குவதற்கு முன் கோடப்மந்து கால்வாயை முறையாக தூர்வார வேண்டும் என நீலகிரி மாவட்ட மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...