குரங்கணி தீ விபத்து : பலி எண்ணிக்கை 13-ஆக உயர்வு

குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது

தேனி: குரங்கணி காட்டுத்தீயில் சிக்கி சிகிச்சை பெற்று வந்த கண்ணன் என்பவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து பலி எண்ணிக்கை 13 ஆக உயர்ந்துள்ளது

தேனி மாவட்டம் போடி அருகே உள்ள குரங்கணி மலைக்குச் சென்னை மற்றும் ஈரோட்டைச் சேர்ந்த 39 பேர் மலையேற்ற பயிற்சிக்கு சென்றனர். அப்போது அங்கு ஏற்பட்ட காட்டுத் தீயில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். காயமடைந்தவர்கள் மதுரை மற்றும் கோவை அரசு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

சிகிச்சை பெற்று வந்த இருவர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்ததில் பலி எண்ணிக்கை 12 ஆக இருந்தது. இந்த நிலையில், மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கவுந்தம்பாடியை சேர்ந்த கண்ணன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதையடுத்து, காட்டுத்தீயில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது. 

இதற்கிடையே, குரங்கணி காட்டுத்தீ விபத்தில் 12 பேரை அழைத்துச் சென்ற ஈரோட்டைச் சேர்ந்த ஒருங்கிணைப்பாளர் கைது செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 

Newsletter

தொண்டாமுத்தூர் அருகே வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில் வீச்சு; ரவுடி உட்பட 4 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை தொண்டாமுத்தூரில் காதலிக்க மறுத்த இளம்பெண் வீட்டின் மீது மண்ணெண்ணெய் பாட்டில்கள் வீசி கொலை மிரட்டல் விடுத்த சம்பவத்த...

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...