தமிழகத்தைத் தொடர்ந்து ஆந்திராவிற்கு குறி வைக்கிறார் பிரதமர் மோடி

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார்.

பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்கிறாரோ, அதையே ஆந்திராவிலும் செய்ய முயற்சிப்பதாக அம்மாநில முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். 

ஆந்திராவில் ஆட்சி செய்து வரும் தெலுங்கு தேசக் கட்சி அண்மையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகியது. இதைத்தொடர்ந்து, மத்திய அமைச்சரவையில் இருந்து தெலுங்கு தேசக் கட்சியைச் சேர்ந்தவர்கள் ராஜினாமா செய்தனர். இந்த நிலையில், முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு, தனது கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் தொலைபேசியில் வாயிலாக கலந்துரையாடினார்.

அப்போது அவர் பேசியதாவது: பிரதமர் மோடி தமிழகத்தில் என்ன செய்து கொண்டிருக்கிறாரோ, அதனையே ஆந்திர மாநிலத்திலும் செய்ய முயற்சிக்கிறார். ஆந்திர மாநிலத்திற்கு என்ன சலுகைகள் வழங்க முடியுமோ, அதனை வழங்கவே தாங்கள் வலியுறுத்தி வருகிறோம். ஜெகன் மோகன் ரெட்டி மற்றும் பவன் கல்யாணையும் வைத்து தங்களுக்கு எதிராக திசை திருப்பும் முயற்சியில் அவர் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் மோடிக்கு எதிராக அலைவீசுகிறது. சமீபத்தில், உத்தரபிரதேசத்திலும், பீகாரிலும் இடைத்தேர்தலில் பா.ஜ.க., தோல்வி அடைந்தது அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு. இவ்வாறு அவர் பேசினார். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...