+1 மாணவர்கள் விபத்தில் சிக்கி படுகாயம்: பொதுத்தேர்வு எழுதச் சென்றபோது பரிதாபம்

திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.


திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.

திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனேஷ். அரசுப் பள்ளி ஒன்றில் +1 படித்து வருகிறார். பொதுத்தேர்வு நடைபெறுவதால் இவர், தனது நண்பர்களான கவின் மற்றும் கண்ணன் என்பவர்களுடன் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது. 



தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி பள்ளி மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். 

இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 



Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...