திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் +1 தேர்வு எழுதச் சென்ற மூன்று மாணவர்கள் படுகாயமடைந்தனர்.
திருப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரனேஷ். அரசுப் பள்ளி ஒன்றில் +1 படித்து வருகிறார். பொதுத்தேர்வு நடைபெறுவதால் இவர், தனது நண்பர்களான கவின் மற்றும் கண்ணன் என்பவர்களுடன் தாராபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து கரூரை நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே வந்த அரசு பேருந்து மோதியதில் இரண்டு சக்கர வாகனத்தில் சென்ற மூவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

தொடர்ந்து, பேருந்து ஓட்டுநர் விபத்தை ஏற்படுத்தியதாகக் கூறி பள்ளி மாணவர்கள் பேருந்தின் கண்ணாடியை கற்களால் அடித்து நொறுக்கினர். மேலும், படுகாயம் அடைந்த மூன்று பேரையும் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இந்த விபத்து குறித்து தாராபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
