மகள் சாவில் மர்மம்: விசாரணை வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் மனு

மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார்.

கோவை: மகள் சாவில் மர்மம் இருப்பதாகக் கூறி பெண் ஒருவர் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தார். 

ஆவரம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர்கள் சித்ரா-காளீஸ்வரன் தம்பதியினர். இவர்களது மகள் பவித்ரா(13).



குடும்ப பிரச்சனை காரணமாக கணவரை பிரிந்து வாழும் சித்ரா தனது மகள் பவித்ரா-வை பூ மார்கெட் அருகில் உள்ள சாரதாமணி தேவி பள்ளி விடுதியில் தங்கி படிக்க வைத்து வருகிறார். 

இந்நிலையில், நேற்று காலை சித்ரா-வை தொடர்பு கொண்ட பள்ளி நிர்வாகத்தினர் பவித்ராவிற்கு உடல் நிலை சரியில்லாத காரணத்தால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவித்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த அவர் மருத்துவமனைக்குச் சென்றார். அப்போது பவித்ரா இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். 

இது குறித்து, பள்ளி நிர்வாகத்திடம் சித்ரா என்ன நடந்தது? என்று கேட்டபோது முறையான பதில் அளிக்கவில்லை என்று குற்றம்சாட்டிய சித்ரா, இந்த மரணத்திற்கு உரிய விசாரணை மேற்கொள்ள வலியுறுத்தி கோவை மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...