கோவையில் மின் வேலியில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

கோவை: கோவையை அடுத்த மத்திபாளையம் பகுதியில் 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று உயிரிழந்தது.

மதுக்கரை வனச் சரகத்திற்கு உட்பட்ட மத்திபாளையம் பகுதியில் சந்திரன் என்பவருக்குச் சொந்தமான பண்ணை ஒன்று உள்ளது. அந்த பண்ணையில் சூரிய ஒளியில் இயங்கும் மின் வேலி அமைக்கப்பட்டுள்ளது. வன விலங்குகள் பண்ணைக்குள் புகுந்துவிடாமல் இருப்பதற்காக அந்த மின் வேலி அமைக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், அங்கு வந்த 35 வயது மதிக்கத்தக்க ஆண் யானை ஒன்று மின் வேலியில் சிக்கி உயிரிழந்தது.



இது குறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்குச் சென்றனர். அப்போது, வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்ததாக தகவல் விடுத்தும் அதை விரட்ட வனத்துறையினர் கால தாமதமாக வந்ததாகக் கூறி அப்பகுதி மக்கள் அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.



இதனைத் தொடர்ந்து, கால்நடைத் துறை மருத்துவர் மனோகரன் தலைமையிலான மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து உயிரிழந்த யானையை உடற்கூறு ஆய்விற்காக எடுத்துச் சென்றனர். யானை உயிரிழப்புக்குக் காரணமான பண்ணை உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...