மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. 

இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் :

முதல் வகுப்பு :

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)

குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)

இரண்டாம் வகுப்பு:

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...