மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே கோடைக்கால சிறப்பு ரயில் சேவை அறிவிப்பு

மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் இயங்கும் பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் வரும் 31-ம் தேதி முதல் இயக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

இது தொடர்பாக தென்னக ரயில்வே, சேலம் கோட்டம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "நீலகிரி மலை ரயில் ஆர்வலர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையை ஏற்று, சேலம் ரயில்வே கோட்ட மேலாளர் ஹரிசங்கர் வர்மாவின் முயற்சியின் காரணமாக, வரும் 31-ம் தேதி முதல் ஜுன் 24-ம் தேதி வரை அனைத்து சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் மேட்டுப்பாளையம் குன்னூர் இடையே நீராவி எஞ்சின் மூலம் (26+26 மொத்தம்) 52 பாரம்பரிய கோடைக்கால சிறப்பு ரயில் சேவைகள் இயக்கப்பட உள்ளன. 

இந்த ரயிலில் 2 முதல்வகுப்பு மற்றும் ஒரு இரண்டாம் வகுப்பு முன்பதிவு பெட்டிகள் இருக்கும். இந்த ரயில் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் காலை 9.10 மணிக்கு மேட்டுப்பாளையத்தில் இருந்து புறப்பட்டு, கல்லார், ஹில்குரோவ் வழியாக பயணித்து குன்னூரை மதியம் 12.30 மணிக்கு சென்றடையும். மறுமார்க்கத்தில் மதியம் 1.30 மணிக்கு குன்னூரில் இருந்து புறப்பட்டு, ஹில்குரோவ், கல்லார் வழியாக பயணித்து மேட்டுப்பாளையத்தை மாலை 04.20 மணிக்கு வந்தடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான கட்டண முன்பதிவு நாளை (14.03.2018) காலை 8.00 மணி முதல் தொடங்க உள்ளதால், சுற்றுலாப் பயணிகளும், இதர ரயில் பயணிகளும் இதற்கு தேவையான வரவேற்பு அளித்து இந்த சேவைகளை பெரும் வெற்றி பெறச் செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது," என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கட்டண விபரம் :

முதல் வகுப்பு :

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs. 1,100/- குழந்தைகள் : Rs. 650/- (5 முதல் 12 வயது வரை)

குன்னூர் மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 1,100 /- குழந்தைகள் : Rs. 650 /- (5 முதல் 12 வயது வரை)

இரண்டாம் வகுப்பு:

மேட்டுப்பாளையம் - குன்னூர் : பெரியவர்கள் : Rs.800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

குன்னூர் - மேட்டுப்பாளையம்: பெரியவர்கள் : Rs. 800 /- குழந்தைகள் : Rs. 500 /-(5 முதல் 12 வயது வரை)

5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பயணச்சீட்டு வாங்க வேண்டியதில்லை.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...