நெருப்பில் சிக்கியவர்களை காப்பாற்றிவிட்டு உயிர்நீத்த நிஷாவின் உடல் அடக்கம்

தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது.

தருமபுரி : தேனி மாவட்டம் குரங்கணி தீவிபத்தில் உடன் சென்றவர்களை காப்பாற்றிவிட்டு, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்த நிஷா என்ற இளம்பெண்ணின் உடல் இன்று அடக்கம் செய்யப்பட்டது. 

தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியைச் சேர்ந்தவர் தமிழ்ஒளி. இவர் சென்னையில் மத்திய தொழிலாளர் வைப்பு நிதி அலுவலகத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவராவார். இவருக்கு நிஷா, நிரோஷா என இரு மகள்கள் உள்ளனர். இதில், மூத்த மகள் நிஷா (30), பி.டெக். முடித்து இங்கிலாந்தில் எம்.எஸ். முடித்துள்ளார். தற்போது, சென்னையில் எல்.என்.டி நிறுவனத்தில் மேலாளராகப் பணிபுரிந்து வந்தார். 

கடந்த 8-ந் தேதி உலக மகளிர் தினத்தன்று ஏற்பாடு செய்யப்பட்ட மலையேறும் பயிற்சிக்காக சென்னையிலிருந்து புறப்பட்டு 9-ந் தேதி காலை தேனியை சென்றடைந்துள்ளனர். அங்கு 11-ம் தேதி ஏற்பட்ட காட்டுத் தீயில் டிரெக்கிங் சென்றவர்கள் தீயில் சிக்கிக் கொண்டனர். அப்போது, தன் உயிரையும் பொருட்படுத்தாமல் மற்றவர்களுக்கு வழிகாட்டிய நிஷா, 100 சதவீத தீக்காயங்களுடன் உயிரிழந்தார். 

திருமணம் செய்து கொள்ளாத நிஷா பல வருடங்களாக டிரெக்கிங் சென்று வந்துள்ளார். இவர், டிரெக்கிங் ஒருங்கிணைப்பாளராகவும் இருந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. நிஷாவின் உடல் இன்று காலை பாப்பிரெட்டிப்பட்டியில் அடக்கம் செய்யப்பட்டது. 

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...