"கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடை இல்லாத நகரமாக கோவை உள்ளது"

கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார்.

கோவை: கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை என்று மின்வாரிய மண்டல முதன்மை பொறியாளர் கூறியுள்ளார். 



தமிழ்நாடு மின்சார பயன்பாட்டாளர்கள் சங்கம் சார்பில் கலந்தாலோசனை கூட்டம் ரேஸ்கோர்ஸ் பகுதியில் உள்ள தனியார் ஹோட்டலில் நேற்று நடைபெற்றது. இதில் கலந்துகொண்ட கோவை மண்டல முதன்மை பொறியாளர் ஹல்துரை பேசுகையில்," கோவை மாவட்டத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக மின்தடையே இல்லை. 



மாவட்டத்தில் 17 புதிய துணை மின் நிலையங்களை தொடங்கியுள்ளோம். இதன் மூலம் தடையில்லா மின்சாரம் கிடைத்து வருகிறது. மின்சார வசதியே இல்லாத பூமனூர் மற்றும் சேம்புக்கரை என்ற இரண்டு கிராமங்களுக்கு தற்போது மின்சார வசதி கொடுக்கப்பட்டுள்ளது. வரும் 2019-க்குள் மின்சார கசிவினை 13.5 சதவீதம் குறைக்கத் திட்டமிட்டுள்ளோம். 

மின்சார சிக்கனம் என்பதை பொதுமக்கள் அனைவரும் கடைப்பிடித்தால் அதிக அளவில் மின்சாரம் வீணாவதைத் தடுக்க முடியும். " என்றார்.

Newsletter

கோவை சிறுமி கொலை வழக்கு: ஈரநெஞ்சம் காப்பக முதியோர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன அஞ்சலி

கோவை சூலூர் அருகே 10 வயது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு நீதி கேட்டு ஈரந...

காய்ச்சலால் கோவை தனியார் மருத்துவமனையில் அமைச்சர் செங்கோட்டையன் அனுமதி

லேசான காய்ச்சல் காரணமாக தமிழக வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் கோவையில் உள்ள KMCH தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப...

ஆனைமலை புலிகள் காப்பகம்: காண்டூர் கால்வாயில் சிக்கி ஆண் யானை உயிரிழப்பு

பொள்ளாச்சி வனக்கோட்டம் காண்டூர் கால்வாயில் 20 அடி ஆழத்தில் சிக்கிய ஆண் யானையை மீட்க முயற்சி மேற்கொள்ளப்பட்ட நிலையில், நீ...

வடகோவையில் ஓடும் ரயிலில் இருந்து விழுந்த பயணி உயிரிழப்பு

வடகோவை ரயில் நிலையம் அருகே கன்னியாகுமரி செல்லும் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணி, கோவை அரசு மருத்துவமனையில்...

கோவையில் UPSC முதற்கட்ட தேர்வு: 6,526 பேர் பங்கேற்பு

இந்தியாவின் மிக முக்கியமான போட்டித் தேர்வான UPSC முதற்கட்ட தேர்வு கோவையில் 15க்கும் மேற்பட்ட மையங்களில் நடைபெற்றது. IAS,...

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...