'அவர் பேர சொல்ல உனக்கென்ன தகுதி இருக்கு?' - எச்.ராஜாவை விளாசும் நெட்டிசன்ஸ்

தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

கோவை: தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது என்று பா.ஜ.க. தேசிய செயலாளர் எச்.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் தெரிவித்துள்ளார். இதற்கு சமூகவலைத்தள பயன்பாட்டாளர்கள் கடும் எதிர்ப்புகளைத் தெரிவித்து வருகின்றனர்.

திரிபுராவில் லெனின் சிலை அகற்றப்பட்டதைப் போல் தமிழகத்தில் இருந்து பெரியார் சிலை அகற்றப்படும் என்று பா.ஜ.க.தேசிய செயலாளர் எச்.ராஜா நேற்று பேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டார்.

இந்த நிலையில் நேற்று நள்ளிரவு திருப்பத்தூரில் பெரியார் சிலையை பா.ஜ.க. பிரமுகர்கள் சேதப்படுத்தினர்.

இதற்கு பதிலாக அடையாளம் தெரியாத சிலர் இன்று அதிகாலை கோவை காந்திபுரம் பகுதியில் உள்ள பா.ஜ.க. அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுகளை வீசிச் சென்றனர். 

தொடர்ந்து, பெரியார் சிலை குறித்து பேஸ்புக் பக்கத்தில் தான் எந்த பதிவும் செய்யவில்லை என்றும். தனது அனுமதியின்றி பேஸ்புக் அட்மின் அவ்வாறு பதிவிட்டதாகவும் எச்.ராஜா தெரிவித்துள்ளார்.

மேலும் அந்த பதிவில், "தமிழகத்தில் தேசியம், தெய்வீகம் காக்கும் பணியில் பெரியவர் முத்துராமலிங்கத் தேவர் காட்டிய வழியில் நம்மை ஈடுபடுத்திக் கொள்ள வேண்டிய நேரமிது." என்று பதிவு செய்துள்ளார்.

இதற்கு, தமிழகத்தில் சாதிய அரசியல் செய்து ஆதாயம் பெற முயல்வதாக எச்.ராஜா மீது சமூக வலைத்தள பயன்பாட்டாளர்கள் குற்றம் சட்டி வருகின்றனர்.

புதிய பேஸ்புக் பதிவின் கீழ் அவரை மானாவாரியாக வறுத்தெடுத்து வரும் நெட்டிசன்கள், "முத்துராமலிங்கத் தேவரின் பெயரை உபயோகித்து அரசியல் பேச உனக்கென்ன தகுதி இருக்கின்றது." என்று கோபத்துடன் கேள்வியெழுப்பி வருகின்றனர்.



அதோடு, காதில் ரத்தம் வரும் அளவிற்கு மானாவாரியாக விளாசி வருகின்றனர் நெட்டிசன்கள்.



Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...