துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் - கு.ராமகிருட்டிணன் அதிரடி

தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.


கோவை: தமிழகத்தில் பெரியார் சிலைகளை அகற்றுவோம் என சர்ச்சையான கருத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ள எச்.ராஜாவுக்கு, துணிவிருந்தால் பெரியார் சிலை மீது கை வையுங்கள் என்று அதிரடி பதிலை தந்திருக்கிறார் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொது செயலாளர் கு.இராமகிருட்டிணன்.

கடந்த 3-ம் தேதி நடைபெற்று முடிந்த திரிபுரா சட்டமன்ற தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி வெற்றி பெற்றுள்ளது. இன்னும் ஆட்சி கூட ஏற்காத நிலையில் அம்மாநிலத்தில் நிறுவப்பட்டிருந்த கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் லெனின் சிலை பா.ஜ.க.வினரால் இடித்து அகற்றப்பட்டுள்ளது.

"இன்று லெனின் சிலையை அகற்றப்பட்டது போல நாளை தமிழகத்தில் ஜாதி வெறியர் பெரியாரின் சிலைகளையும் அகற்றுவோம்" என்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர் எ.ராஜா தனது பேஸ்புக் பக்கத்தில் பதிவு செய்துள்ளார். இதற்கு பல்வேறு கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து வருகிறார்கள்.

இதன் ஒரு பகுதியாக கோவையில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் பொதுச் செயலாளர் கு.இராமகிருட்டிணன் கூறும் போது, "தமிழகத்தில் ஜாதி வெறியை தூண்டி வன்முறையை ஏற்படுத்தி, ரத்த பூமியாக்க வேண்டும் என்பதற்காகவே வெறிப்பிடித்த சிந்தனையில் ராஜா இது போல் பதிவு செய்து வருகிறார்.

அவருக்குத் துணிவிருந்தால் ஒரு இடத்திலாவது கை வைத்துப் பார்க்கட்டும். தமிழக அரசு தந்தை பெரியாரின் மீது மரியாதை வைத்திருந்தால் எச்.ராஜா மீது கிரிமினல் வழக்கு உடனடியாக தொடுக்க வேண்டும். அவரை கண்டித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடப்போகிறோம்." என்றார்.

Newsletter

காரமடையில் 5 கிலோ கஞ்சா பறிமுதல்; ஒடிசாவைச் சேர்ந்த இருவர் கைது

கோவை மாவட்டம் காரமடை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 5 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து, ஒடிசா மாநிலத்தைச் சேர்...

வன்னியர்களுக்கு தனி இடஒதுக்கீடு அறிவித்தால், 251 சமூகங்கள் எதிர்க்கும்: ஓபிசி மக்கள் உரிமைகள் கட்சி

வன்னியர் சமூகத்திற்கான தனி இடஒதுக்கீட்டை தமிழக அரசு அறிவித்தால், மாநிலம் முழுவதும் 251 பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும்...

நிலம் அளவீடு செய்யாததால், பட்டா வழங்கியும் குடியிருக்க முடியாமல் அவதி- ஆட்சியரிடம் 330 குடும்பங்கள் மனு

ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் இலவச வீட்டு மனைப் பட்டா வழங்கப்பட்டு ஓராண்டு கடந்தும், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலங்கள் அ...

கோவையில் ஜூன் 19ல் தனியார் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறுகிறது

கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையத்தில் ஜூன் 19, 2026 அன்று தனியார் துறை வேலைவாய்ப்பு...

கோவையில் கல்லூரி மாணவரை சிறை வைத்து தாக்கி நகை, பைக் பறிப்பு

குனியமுத்தூரில் புதிய வாடகை அறை பார்க்கச் சென்ற கல்லூரி மாணவரை அறைக்குள் அடைத்து வைத்து கத்தி, இரும்புக் கம்பியால் தாக்க...

கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த கொலை வழக்குக் கைதி உயிரிழப்பு

கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் பாதுகாப்புடன் சிகிச்சை பெற்று வந்த கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி மணிகண்டன் உயிரிழந்த...