கோவையில் சுட்டெரிக்கப்போகிறது வெயில்

அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை : அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கோவையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குளிரும் காலை நேரங்களில் வெயிலும் வாட்டி வதைத்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் 30 டிகிரி முதல் 33 டிகிரி வரை சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பலகலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிம்ளிசிட்டி-க்கு அவர் அளித்த பேட்டியில், " கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடை காலம் என்பது முன்கூட்டியே தொடங்கிவிடும். அதாவது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையானது கோவை மாவட்டத்திற்கு சரியான அளவில் கிடைத்துள்ளது. 672 மி.மீ எதிர்பார்த்த நிலையில் 665 மி.மீ மழை பெய்துள்ளது. 

இதேபோல் கோடை மழையும் 132 மி.மீ பெய்தால் இந்தாண்டு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 2015-ம் ஆண்டு இதே மழை அளவு கோடை மாதங்களில் விட்டு விட்டுப் பெய்த காரணத்தினால் கோவையில் வெயில் பெரிய அளவில் இல்லை. அதே போல் இந்தாண்டும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்றார்.

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...