கோவையில் சுட்டெரிக்கப்போகிறது வெயில்

அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

கோவை : அடுத்த ஐந்து நாட்களுக்கு கோவையில் வெயில் சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக வேளாண் காலநிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது. 

கோவையில் கடந்த சில நாட்களாகவே இரவு நேரங்களில் குளிரும் காலை நேரங்களில் வெயிலும் வாட்டி வதைத்து வருகின்றன.

இந்நிலையில், கோவையில் அடுத்த ஐந்து நாட்களுக்கு வெயில் 30 டிகிரி முதல் 33 டிகிரி வரை சுட்டெரிக்க வாய்ப்புள்ளதாக கோவை வேளாண்மை பலகலைக் கழகத்தின் காலநிலை ஆராய்ச்சி மைய துறைத் தலைவர் பன்னீர் செல்வம் தெரிவித்துள்ளார். 

இது குறித்து சிம்ளிசிட்டி-க்கு அவர் அளித்த பேட்டியில், " கோவை மாவட்டத்தைப் பொறுத்தவரை கோடை காலம் என்பது முன்கூட்டியே தொடங்கிவிடும். அதாவது பிப்ரவரி மாதத்தில் தொடங்கி மார்ச் மற்றும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும். நடப்பு ஆண்டில் தென்மேற்கு மற்றும் வடகிழக்கு பருவமழையானது கோவை மாவட்டத்திற்கு சரியான அளவில் கிடைத்துள்ளது. 672 மி.மீ எதிர்பார்த்த நிலையில் 665 மி.மீ மழை பெய்துள்ளது. 

இதேபோல் கோடை மழையும் 132 மி.மீ பெய்தால் இந்தாண்டு வெயிலின் கொடுமையில் இருந்து தப்பிக்கலாம். 2015-ம் ஆண்டு இதே மழை அளவு கோடை மாதங்களில் விட்டு விட்டுப் பெய்த காரணத்தினால் கோவையில் வெயில் பெரிய அளவில் இல்லை. அதே போல் இந்தாண்டும் பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் புதன் மற்றும் வியாழக்கிழமை ஒரு சில இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது." என்றார்.

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...