6 நாட்களுக்குப் பிறகு இறந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை நிறைவு

நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.   

தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார். 

இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது. 

Newsletter

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...