6 நாட்களுக்குப் பிறகு இறந்த குட்டி யானைக்கு பிரேத பரிசோதனை நிறைவு

நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

நீலகிரி : நீலகிரியில் தாய் யானையின் பாசப் போராட்டத்தால், இறந்த குட்டி யானையின் உடலுக்கு 6 நாட்களுக்குப் பிறகு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. 



மசினகுடி அருகே உள்ள பொக்காபுரம் நெல்சன் எஸ்டேட் பகுதியில் குட்டி யானை இறந்து கிடப்பதாக வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது.அதன் பேரில் நேற்று சிங்காரா சரகர் காந்தன், வனவர் கணேசன் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள் அங்குச் சென்று பார்த்தனர். அப்போது, தாய் யானை இறந்த குட்டி யானையின் உடலை கால்களுக்கு இடையே வைத்துக்கொண்டு யாரையும் நெருங்கி விடாமல் பாதுகாப்பாக இருந்தது. எவரையும் யானை நெருங்க விடாததால், இறந்த குட்டியின் சடலத்தை மீட்டு, அப்புறப்படுத்தும் வனத்துறையினரின் முயற்சி தோல்வியில் முடிந்தது.   

தொடர்ந்து, 6 நாட்களாக தாய் யானையில் பாசப் போராட்டம் நீடித்தது. இந்த நிலையில், இறந்த தாய் யானையை விட்டு, தாய் யானை இன்று விலகிச் சென்றது. 6 நாட்களுக்குப் பிறகு மீட்கபட்ட இறந்த குட்டி யானையின் உடலுக்கு, வனசரகர் காந்தன் முன்னிலையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. இறந்த குட்டி யானை இயற்கை முறையில் இறந்ததாகக் கால்நடை மருத்துவர் உமேஷ் தெரிவித்தார். 

இறந்து குட்டி யானையை விட்டுப் பிரியாமல் 5 நாட்களாக நீடித்த தாய் யானையின் பாசப் போராட்டம் அனைவரையும் நெகிழ வைத்தது. 

Newsletter

பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்பு: கோவை ரயில்கள் பகுதியாக ரத்து

ஈரோடு - திருப்பூர் இடையே பெருந்துறை ரயில் நிலையத்தில் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்படுவதால், மே 24ஆம் தேதி திருச்சி -...

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரிலிருந்து கரக்பூருக்கு வாராந்திரச் சிறப்பு ரயில் இயக்கம்

கோடை விடுமுறையையொட்டி கோவை  போத்தனூரில் இருந்து மேற்கு வங்க மாநிலம் கரக்பூருக்கு வாராந்திர சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளத...

கோவை பீளமேடு 27வது வார்டில் தூய்மை இந்தியா 2.0 திருவிழா மற்றும் பல்வேறு தூய்மை பணிகள் ஆய்வு

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு வார்டு 27ல் தூய்மை இந்தியா திட்டம் 2.0 விழா நடைபெற்றது. கவுன்சிலர் அம்பிகா தனபால் குப்பை பி...

கோவை பிள்ளையார்புரத்தில் மரப்பராமரிப்பு பணிக்கு  தன்னார்வலர்களுக்கு அழைப்பு

கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட பிள்ளையார்புரத்தில் கோவை குளங்கள் பாதுகாப்பு அமைப்பு சார்பில் 444-வது வார மரப்பராம...

3 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள அரசாணையை அமல்படுத்த TACT வலியுறுத்தல்

குறுந்தொழில் நிறுவனங்களுக்கான மின் இணைப்பு பிரிவு மாற்றம் தொடர்பான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகள் கடந்தும் அமல்படுத்தப்படா...

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...