அவினாசி சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் பணியினை அமைச்சர் ஆய்வு

உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.

கோவை : உப்பிலிபாளையம்- சின்னியம்பாளையம் வரியிலான சாலையில் மேம்பாலம் கட்ட நடைபெற்று வரும் மண் ஆய்வுப் பணிகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி இன்று பார்வையிட்டார்.



கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையில் வாகன பெருக்கத்தினை கருத்தில் கொண்டு உப்பிலிபாளையம் முதல் சின்னியம்பாளையம், காளப்பட்டி சாலை வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டும் திட்டத்திற்கு கடந்த 2016-ம் ஆண்டு சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை ரூ.950 கோடி அறிவிக்கப்பட்டது.



அதனைத்தொடர்ந்து, 2016 நவம்பர் 30ம் தேதியன்று விரிவான திட்டம் தயாரித்து நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன. சுமார் 9 கிலோ மீட்டர் நீளத்திற்கு சர்வே மற்றும் போக்குவரத்துக் கணக்கீடு பணி முடிக்கப்பட்டு 170 இடங்களில் மண் பரிசோதனை ஆய்வுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இதில் 60 இடங்களில் ஆழ்துளை பணி முடிக்கப்பட்டு வரும் மார்ச் மாதம் இறுதிக்குள் வடிவமைப்பு மற்றும் மதிப்பீடு தயாரிக்கும் பணிகள் நிறைவுபெற உள்ள நிலையில் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இன்று அவினாசி சாலையில் உள்ள நவ இந்தியா அருகே ஆய்வு மேற்கொண்டார்.



இதனைத்தொடர்ந்து, செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், கோவையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் விதமாக 9 கிலோ மீட்டர் தூரத்திற்கு மேம்பாலம் அமைக்கப்பட உள்ளது. மார்ச் மாத இறுதிக்குள் மண் பரிசோதனை செய்யும் பணி நிறைவடையும். மண் பரிசோதனைக்காக 65 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இதே போல, அத்திக்கடவு- அவினாசி திட்டத்தினை இரண்டாண்டுகளில் முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், உக்கடம் பாலம், மேற்கு புறவழிச்சாலை, ஒருங்கிணைந்த பேருந்து நிலையம், லாரிப்பேட்டை போன்ற பணிகள் அனைத்தும் கொண்டு வரப்படும்.

காவிரி நீருக்காகத் தமிழக முதலமைச்சர் கர்நாடக முதலமைச்சரைச் சந்திக்கும் முயற்சி பாராட்டுதலுக்குரியது.

கோவை, அவினாசி சாலையில் அமையும் பாலமும், மெட்ரோ திட்டமும் ஒன்றுக்கு ஒன்று இடையூறு ஏற்படாமல் இருக்கும் வகையில் வடிவமைக்கப்பட இருக்கிறது. மெட்ரோ ரயில் திட்டம் நீண்ட கால திட்டம், அதற்காக இந்த பால திட்டத்தை நிறுத்த முடியாது. இரண்டும் பாதிப்பில்லாத வகையில் வடிவமைக்கப்படும். அதேப் போல கோவை 100 அடி சாலையில் இருக்கும் பாலம் பிரச்சனைகள் இல்லாதபடி வடிவமைக்கப்பட்டுள்ளது.

மத்திய இராணுவ அமைச்சர் நிர்மலா சீத்தாராமனை மிரட்டியதாக வெளியான தகவல் தவறானது. தவறான தகவல் என்பதால் அதற்கு உடனடியாக பதில் சொல்லவில்லை. இராணுவ தளவாடங்களுக்கான ஆய்வகம் அமைக்க வேண்டும் என மத்திய அமைச்சரிடம் வலியுறுத்தப்பட்டது. மத்திய அமைச்சரை சந்தித்த போது எஸ்.ஆர்.சேகர், வானதி சீனிவாசன் போன்ற பாஜக நிர்வாகிகள் அனைவரும் உடன் இருந்தனர். பாஜக மாநிலப் பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் பேசியதை நான் பார்க்கவில்லை. அதை பார்க்காமல் கருத்து சொல்லமுடியாது.

தமிழகத்தில் பேருந்து வழித் தடங்களை அமைச்சர்கள் வாங்கிவிட்டதாக டி.டி.வி. தினகரன் ஆதரவாளர் செந்தில் பாலாஜி கூறியது ஆதாரமற்ற குற்றச்சாட்டு. தமிழகத்தில் தரமான 2000 பேருந்துகள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது. கனத்த இதயத்துடன் போக்குவரத்துக் கட்டணம் உயர்த்தப்பட்டது.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த பேட்டியின் போது சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ஜூனன், அருண்குமார், ஆறுக்குட்டி ஆகியோர் உடன் இருந்தனர்.

Newsletter

சூலூர் சிறுமி பாலியல் கொலை வழக்கு: மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் குற்றவாளிக்கு ஜூன் 5 வரை நீதிமன்ற காவல்

கோவை சூலூர் அருகே சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய, தப்பிக்க முயன்று அரசு மருத...

சூலூர் சிறுமி கொலை வழக்கு: POCSO சட்டத்தில் வழக்குப்பதிவு

கோவை சூலூர் பகுதியில் சிறுமி கொலை வழக்கில் இருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், பாலியல் வன்கொடுமை நடைபெற்றுள்ளது உறுதி...

கோவை சிறுமி கொலை: மன்னிக்க முடியாத குற்றம் - முதல்வர் விஜய்

கோவையில் 10 வயது சிறுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். குற்றவாளிகளுக்க...

கோவை சூலூர் சிறுமி கொலை வழக்கு - சம்பவ இடத்தில் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி நேரில் ஆய்வு..!

கோவை மாவட்டம் சூலூர் அருகே 10 வயது சிறுமி கடத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தி...

சூலூர் சிறுமி கொலை: குடும்பத்தினரை சந்தித்த அமைச்சர் சம்பத் குமார்

கோவை சூலூரில் காணாமல் போன 10 வயது சிறுமி சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் ச...

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...