குடியரசு தினத்தில் காந்தி சிலைக்கு மனு கொடுத்து போராட்டம்

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திருப்பூர், ஜனவரி 26

உடுமலையில் குடியரசு தினமான இன்று காந்தி சிலைக்கு மனு கொடுத்து தமிழர் பண்பாட்டு பேரவையினர் நூதனப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



உடுமலை ரயில் நிலையத்தில் மதுரை- திருவனந்தபுரம் அமிர்தா எக்ஸ்பிரஸ் நின்றுசெல்ல வேண்டும் என்று நீண்ட நாட்களாக தமிழர் பண்பாட்டுப் பேரவையினர் கோரிக்கை விடுத்து வந்தனர்.

இதுதொடர்பாக, சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களிடம் பல முறை மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை.

இந்நிலையில், பொதுமக்களின் கோரிக்கையை அலட்சியமாகக் கருதி செயல்பட்டு வரும் மத்திய ரயில்வே துறையையும், சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கண்டித்து இன்று தமிழர் பண்பாட்டு பேரவையினர், உடுமலை காவல்நிலையம் அருகில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கு மனு கொடுத்து, காந்தியிடம் தங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கண்டன கோசங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர்.



Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...