வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் குடியரசு தினவிழா அனுசரிப்பு

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

கோவை, ஜனவரி 26

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தில் 69-வது குடியரசு தினவிழா இன்று (ஜன. 26) சிறப்பாகக் கொண்டாடப்பட்டது. இதில், துணைவேந்தர் கு. இராமசாமி தேசியக் கொடி ஏற்றி குடியரசு தின விழா உரையாற்றினார். வேளாண்மைக் கல்லூரி முதன்மையர் எஸ்.மகிமைராஜா வரவேற்புரையாற்றினார்.

துணைவேந்தர் உரையாற்றுகையில், நாட்டை ஒன்றிணைத்து இந்தியாவை உலகின் மிகப்பெரிய குடியரசாக்கிய இந்தியத் தலைவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்தார். இந்தியாவில், நவீன வேளாண்மை தொழில்நுட்பங்களால் நாம் உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்று அனைவருக்கும் உணவு அளிக்கும் நிலையடைந்தோம். உணவு தானிய உற்பத்தியில் தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் பங்களிப்பையும், தற்போதுள்ள தேசத்தின் எதிர்பார்ப்பையும் சுட்டிக்காட்டினார்.



இதனைத்தொடர்ந்த, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக் கழகத்தின் புதிய இணையதள முகவரியை துணை வேந்தர் துவக்கி வைத்தார். தொடர்ந்து, கலை நிகழ்ச்சிகளும், பரிசளிப்பு விழாவும் நடைபெற்றது.



இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழகத்தின் உயர் அதிகாரிகள் மற்றும் பேராசிரியர்கள், தேசிய மாணவர் படை மாணவர்களோடு தேசிய மாணவர் படை அதிகாரிகள் செல்லமுத்து, மற்றும் மனோன்மணி, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், அலுவலர்கள் பல்கலைக்கழகத்திற்குள் செயல்படும் ஆரம்பப் பள்ளி சிறார்கள் மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் இன்று (27.05.2026) 4 துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தம்

கோவை மாவட்டத்தில் மைலம்பட்டி, கோவில்பாளையம், அண்ணா பல்கலைக்கழகம், அங்கலக்குறிச்சி ஆகிய 4 துணை மின் நிலையங்களில் இன்று (2...

“ஆந்திரா டூ கோவை” : லாரியில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சா பறிமுதல் - இருவர் கைது..!

ஆந்திராவில் இருந்து சரக்கு வாகனத்தில் கடத்தி வரப்பட்ட 10 கிலோ கஞ்சாவை கோவை மாநகர மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு (PEW) போலீச...

கோயம்புத்தூர் மாநகராட்சியில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் - 54 மனுக்கள் பெறப்பட்டன

கோயம்புத்தூர் மாநகராட்சி பிரதான அலுவலகத்தில் மேயர் கா.ரங்கநாயகி ராமச்சந்திரன் தலைமையில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்ட...

திருமூர்த்தி அணை நீர்மட்டம் 55.46 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை அருகே அமைந்துள்ள திருமூர்த்தி அணையின் நீர்மட்டம் மே 26ஆம் தேதி நிலவரப்படி 55.46 அடியா...

அமராவதி அணை நீர்மட்டம் 30.25 அடியாக உயர்வு

திருப்பூர் மாவட்டம் அமராவதி அணையின் நீர்மட்டம் தொடர் வரத்தால் இன்று 30.25 அடியாக உயர்ந்துள்ளது. அணைக்கு வினாடிக்கு 124 க...

சோலையாறு அணையில் 24.65 அடி நீர்மட்டம்: வினாடிக்கு 138 கன அடி நீர்வரத்து

வால்பாறை சோலையாறு அணையின் நீர்மட்டம் இன்று 24.65 அடியாக உள்ளது. அணையின் மொத்த கொள்ளளவு 160 அடி. நீர்வரத்து வினாடிக்கு 13...