சித்திரை சாவடி அணைக் கரைகளில் கான்கிரீட் சுவர் அமைக்க விவசாயிகள் கடும் எதிர்ப்பு

சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம் அமைக்கும் பணியால் அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.

கோவை, ஜனவரி 23

கோவை மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலையிலிருந்து உருவாகும் நொய்யல் ஆறானது தொண்டாமுத்தூர் உள்ளிட்டு கோவை நகரங்களுக்கு மிக முக்கிய நீராதாரமாக விளங்குகிறது.

தொண்டாமுத்தூர் அருகே உள்ள சித்தரை சாவடி அணையிலிருந்து செல்லக் கூடிய கிளையாறு தொண்டாமுத்தூர், சுண்டம்பாளையம், வீரகேரளம் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாகவும், நிலத்தடி நீராதாரமாகவும் விவசாயத்திற்கு முக்கிய பங்கு வகிக்கிறது. சுமார் 4000 ஏக்கர்  விவசாய நிலங்கள் இந்த அணையை நம்பி உள்ளன.

இந்நிலையில், சித்திரை சாவடி அணையின் நீர்வரும் பாதையைப் பலப்படுத்த கரையின் இரண்டு புறங்களிலும் கான்கிரீட் தளம்  அமைக்கும் பணி பொதுப்பணித்துறையால் சுமார் ரூ. 2 கோடி செலவில் நடைபெற்று வருகிறது.



இதனால், அப்பகுதியில் குடிநீர் மற்றும் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்படுவதாகக் கூறி அப்பகுதி விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து கடந்த மாதம் கட்டிட வேலை நடைபெற்று வரும் கால்வாயில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனையடுத்து கான்கிரீட் சுவர் அமைக்கும் பணி தற்காலிகமாக நிறுத்திவைக்கப்பட்டது.



"இந்த பணிகள் தொடர்ந்தால் சுற்றுவட்டாரப் பகுதியில் விவசாயம் அழிந்து விடும் அபாயம் ஏற்பட்டு விடும். விவசாயிகள் பாதிக்கப்படாத வகையில் பணிகள் தொடர வேண்டும்," என்றார் விவசாயி செ.வேலுசாமி.



இது குறித்து தமிழ்நாடு விவசாயிகள் சங்க கோவை மாவட்டத் தலைவர் சு.பழனிசாமி கூறுகையில், "சித்திரை சாவடி அணையை மீண்டும் பழமை மாறாமல் புதுப்பிக்க வேண்டும். கான்கிரீட் சுவர்கள் அமைப்பதால் நிலத்தடி நீர் மற்றும் வனவிலங்குகளும் பாதிக்கப்படும். எனவே கான்கிரீட் சுவர்களுக்கு பதிலாக மாற்று கட்டுமான பொருட்களைக் கொண்டு அணையை புதுப்பிக்க வேண்டும்" என்றார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...