நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். மேலும் நடப்பாண்டு நீட் தேர்வில் ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
ஜனவரி 22
நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். மேலும் நடப்பாண்டு நீட் தேர்வில் ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டமும், கேள்வியும் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் மே 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் இதனை அறிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்-ல் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படியில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2016 ம் ஆண்டு தமிழகத்துக்கு மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017 முதல் தமிழகத்தில் நீட் தேர்வுப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர நீட் தேர்வு எழுத அவசியம் இல்லை. ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் தனியே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றன.
நீட் தேர்வில் சிபிஎஸ்இ மற்றும் மாநிலப் பாடத்திட்டத்தை ஒருங்கிணைத்து கேள்விகள் கேட்கப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உறுதி அளித்துள்ளார். மேலும் நடப்பாண்டு நீட் தேர்வில் ஒரே மாதிரி வினாத்தாள் வழங்கப்படும் என்று அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
தமிழ் மாணவர்களுக்கு மாநில பாடத்திட்டமும், கேள்வியும் கேட்கப்படும் என்று அவர் கூறியுள்ளார். மருத்துவ படிப்பில் சேர நாடு முழுவதும் மே 6-ம் தேதி நீட் தேர்வு நடைபெறுகிறது. சி.பி.எஸ்.இ எனப்படும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் இதனை அறிவித்துள்ளது. நீட் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே எம்.பி.பி.எஸ் மற்றும் பிடிஎஸ்-ல் சேரமுடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த 2016 ம் ஆண்டு முதல் நீட் தேர்வு அடிப்படியில் எம்பிபிஎஸ் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 2016 ம் ஆண்டு தமிழகத்துக்கு மட்டும் நீட்டில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. 2017 முதல் தமிழகத்தில் நீட் தேர்வுப்படி மருத்துவ மாணவர் சேர்க்கை நடைபெறுகிறது. ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் மருத்துவக்கல்லூரியில் சேர நீட் தேர்வு எழுத அவசியம் இல்லை. ஜிப்மர் மற்றும் எய்ம்ஸ் தனியே மருத்துவ நுழைவுத் தேர்வை நடத்தி வருகின்றன.