மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.
கோவை, ஜனவரி 22
மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.
டாடா நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் 'மும்பை மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான இதில் வெற்றி பெருபவர்களுக்கு 4 லட்சத்து ஐந்தாரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
அதன்படி, நேற்று இந்த போட்டியானது மும்பை சத் ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்டது. 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ் பங்கேற்றார்.
42 கி.மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இவர் 5 நிமிடம் 13 நொடிகளில் குறித்த இலக்கை கடந்து பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில் 7 நிமிடங்களுக்குள் இலக்கை கடப்பவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படும்.
தமிழக காவல்துறையில் இருந்து முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவருக்கு, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.
டாடா நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் 'மும்பை மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான இதில் வெற்றி பெருபவர்களுக்கு 4 லட்சத்து ஐந்தாரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.
அதன்படி, நேற்று இந்த போட்டியானது மும்பை சத் ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்டது. 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ் பங்கேற்றார்.
42 கி.மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இவர் 5 நிமிடம் 13 நொடிகளில் குறித்த இலக்கை கடந்து பதக்கத்தை வென்றார்.
இப்போட்டியில் 7 நிமிடங்களுக்குள் இலக்கை கடப்பவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படும்.
தமிழக காவல்துறையில் இருந்து முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவருக்கு, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.