டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் பதக்கம் வென்றார் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர்

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

கோவை, ஜனவரி 22

மும்பையில் டாடா நிறுவனத்தினர் நடத்திய மாரத்தான் போட்டியில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜன் கலந்து கொண்டு பதக்கம் வென்றுள்ளார்.

டாடா நிறுவனங்களின் சார்பில் ஆண்டு தோறும் 'மும்பை மாரத்தான்' போட்டி நடத்தப்பட்டு வருகிறது. உலகின் மிகச்சிறந்த 10 மாரத்தான் போட்டிகளில் ஒன்றான இதில் வெற்றி பெருபவர்களுக்கு 4 லட்சத்து ஐந்தாரம் அமெரிக்க டாலர்கள் பரிசாக வழங்கப்படுகிறது.

அதன்படி, நேற்று இந்த போட்டியானது மும்பை சத் ரபதி சிவாஜி ரயில் நிலையம் முன்பு நடத்தப்பட்டது. 6 பிரிவுகளாக நடத்தப்பட்ட இந்த போட்டியில் பிரபலங்கள், வெளிநாட்டவர்கள் உட்பட 30 ஆயிரம் பேர் பங்கேற்றனர். இதில் கோவை மாநகர காவல்துறை துணை ஆணையர் தர்மராஜ் பங்கேற்றார்.

42 கி.மீட்டர் ஓட்டப்போட்டியில் பங்கேற்ற இவர் 5 நிமிடம் 13 நொடிகளில் குறித்த இலக்கை கடந்து பதக்கத்தை வென்றார்.

இப்போட்டியில் 7 நிமிடங்களுக்குள் இலக்கை கடப்பவர்களுக்கு மட்டுமே பதக்கங்கள் வழங்கப்படும். 

தமிழக காவல்துறையில் இருந்து முதன்முறையாக இப்போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்ற இவருக்கு, மாநகர காவல் ஆணையர் பெரியய்யா மற்றும் காவல் அதிகாரிகள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...