பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை, ஜனவரி 22
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில், கூட்டணி கட்சி என்ற முறையில் ம.தி.மு.க. பங்கேற்கும். மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு சிபிஎஸ்சி பாடத்திட்ட அடிப்படையில் தான் நடத்தப்படுமென்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கண்டனத்துக்குரியது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பன்முகத்தன்மையை மத்திய அரசு அனைத்து வகையிலும் சிதைத்து வருகிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டிற்கு வெட்டு வைக்கும், என்றார்.
பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வரும் 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில் ம.தி.மு.க. பங்கேற்கும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.
கோவை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் பேசியதாவது :- பேருந்து கட்டண உயர்வை கண்டித்து வருகின்ற 27-ம் தேதி தி.மு.க. நடத்தும் போராட்டத்தில், கூட்டணி கட்சி என்ற முறையில் ம.தி.மு.க. பங்கேற்கும். மருத்துவ படிப்பிற்கான நீட் தேர்வு சிபிஎஸ்சி பாடத்திட்ட அடிப்படையில் தான் நடத்தப்படுமென்ற மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகருக்கு கண்டனத்துக்குரியது. இதனால், மாநில பாடத்திட்டத்தில் படிக்கும் மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். பன்முகத்தன்மையை மத்திய அரசு அனைத்து வகையிலும் சிதைத்து வருகிறது. இந்தி, சமஸ்கிருத திணிப்பு இந்திய ஒருமைப்பாட்டிற்கு வெட்டு வைக்கும், என்றார்.