பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்ட தொகையை மீட்க மாவட்ட ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை மாவட்டம் பச்சாபாளையம் கிளை தபால் நிலையத்தில் கையாடல் செய்யப்பட்டுள்ள ஒரு கோடி ரூபாயை திரும்பப் பெற்று தரக்கோரி, பாதிக்கப்பட்ட மக்கள் கோவை மாவட்ட ஆசியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.



அன்னூர் அருகேயுள்ள பச்சாபாளையம் பகுதியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இங்கு 200-க்கும் மேற்பட்டோர் பல்வேறு சேமிப்பு திட்டம் மூலமாக பல ஆண்டுகளாக பணம் செலுத்தி வந்துள்ளனர். இந்நிலையில், தபால் நிலையத்தில் கணக்கு வைத்துள்ள செந்தில்குமார் என்பவர் தனது சேமிப்பு தொகையை எடுக்க முயன்ற போது, தபால் நிலையத்தில் சேமிப்பு தொகை இல்லாதததை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். பின்னர், இது குறித்து தகவல் அறிந்த அப்பகுதி மக்கள் தங்கள் கணக்குகளை சோதித்து பார்த்த போது பெரும்பாலானோரின் கணக்கில் பணம் இல்லாது தெரியவந்துள்ளது.

இந்த நிலையில், இது குறித்து பாதிக்கப்பட்ட மக்கள் தங்கள் பணத்தை திரும்பப் பெற்று தர நடவடிக்கை எடுக்குமாறு வலியுறுத்தி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். அதில் சுமார் 200-க்கும் மேற்பட்டோரின் கணக்குகளில் இருந்து ஒரு கோடி ரூபாயிக்கு மேல் கிளை தபால் நிலையம் கையாடல் செய்துள்ளதாகவும், இது குறித்து துணை தபால் நிலைய அதிகாரியிடம் புகார் அளித்து 20 நாட்களுக்கு மேலாகியும் எவ்வித நடவடிக்கையும் இல்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். 

தங்கள் சொந்த செலவுகளுக்காக சிறுக சிறுக சேமித்த தொகையை கையாடல் செய்த அதிகாரி மீது நடவடிக்கை எடுப்பதோடு, தங்கள் பணத்தை திருப்பி தர நடவடிக்கை எடுக்குமாறும் அவர்கள் வலியுறுத்தினர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...