கோவை அரசு மருத்துவமனையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்கள் பறிமுதல்

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை, ஜனவரி 22

கோவை அரசு மருத்துவமனையில் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கார்களை போலீசார் இன்று பறிமுதல் செய்தனர்.

கோவை அரசு மருத்துவமனைக்கு தினந்தோறும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இங்கு வரும் நோயாளிகள் மற்றும் பார்வையாளர்களின் வாகனங்களை நிறுத்துவதற்கு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. தினமும் அதிகமான வாகனங்கள் வருவதால் இம்மருத்துவமனையில் பார்க்கிங் பிரச்சனை இருந்து வருகிறது.

இந்த சூழலில், ரயில் நிலையத்தில் பார்க்கிங் கட்டணம் வசூல் செய்யப்படுவதால் ரயில் மூலம் வெளியூர் செல்பவர்கள் அரசு மருத்துவமனை வளாகத்தில் வாகனங்களை நிறுத்திச் செல்வதாக புகார் எழுந்தது.

இதனிடையே, மருத்துவமனையில் நீண்டகாலமாக நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் வாகனங்களை கணக்கெடுக்கும் பணியை அம்மருத்துவமனை ஊழியர்கள் இன்று காலை தொடங்கினர். அப்போது புற்றுநோய் வார்டின் முன்புறமும், மருத்துவமனையின் கேண்டீன் முன்புறமும் கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாக இரண்டு கார்கள் கேட்பாரற்று நிறுத்தி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து, மருத்துவமனையின் இருப்பிட மருத்துவ அதிகாரி சவுந்திரவேல், ரேஸ்கோர்ஸ் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் அரசு மருத்துவமனைக்கு வந்த போலீசார் கேட்பாரற்று இருந்த இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...