உறைபனி காரணமாக முதுமலை வனப்பகுதியில் காட்டுத் தீ ஏற்படும் அபாயம்

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.


நீலகிரி, ஜனவரி 21

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு பனிப் பொழிவின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதால் முதுமலை வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு காட்டுத் தீ உருவாகும் சூழல் நிலவி வருகிறது.

நீலகிரி மாவட்டத்தில் கடந்த ஆண்டைக் காட்டிலும் இந்த ஆண்டு ஓரளவிற்குப் பருவ மழை பெய்திருந்தாலும், உறை பனியின் தாக்கம் சற்று அதிகரித்தே காணப்படுகிறது. காலை மற்றும் மாலை நேரங்களில் குளிரின் தாக்கம் அதிகரித்து காணப்பட்டாலும், பகல் நேரங்களில் வெயிலின் தாக்கம் அதிகரித்துள்ளதால் புல் வெளிகள் மற்றும் வனப்பகுதியில் வறட்சி ஏற்பட்டு வருகிறது.

இதனால், காட்டுத்தீ ஏற்படும் சூழல் நிலவியுள்ளது. இதை பொருட்படுத்தாத ஒரு சிலர் வனப்பகுதிக்குட்பட்ட சாலையோர பகுதிகளில் தீ வைத்துச் சென்று விடுவதால் வனப்பகுதியில் தீ ஏற்படும் சூழல் ஏற்பட்டுள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டு இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். வனப்பகுதியில் ரோந்து பணி மேற்கொள்ள வேண்டும் என வன ஆர்வலர்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...