அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நடிகர் மயில்சாமி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் மயில்சாமி முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பேருந்து கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மக்கள் வருத்தத்துடன் பேசுவது மன வேதனையளிக்கிறது. 

அரசு மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கிறது. முதலில் மக்களுக்கு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். மக்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு அரசை சரியான முறையில் கையாள தெரியவில்லை. அரசு என்பது மற்றொரு அரசுக்கு பணியக்கூடாது. ஆனால், தற்போது பணிகிறார்கள். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கவிஞர் வைரமுத்து இரண்டாவது நாளே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் தனது தாய் என்று கூறிய பின்பும் தொடர்ந்து விமர்சிப்பது பைத்தியக்காரத்தனம். நடிகர் கமல்ஹாசன், கலாம் சமாதியிலிருந்து அரசியல் துவங்குவதை வரவேற்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மாற்றம் உருவாகும். அதே வேளையில், அவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...