அரசியலுக்கு வரும் ரஜினி, கமல் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும்: நடிகர் மயில்சாமி

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

நடிகர்கள் ரஜினிகாந்த், கமல் உள்ளிட்டோர் அரசியலுக்கு வருவது வரவேற்கத்தக்கது எனவும், அதே வேளையில் மக்கள் மத்தியில் இறங்கி அவர்கள் பணியாற்ற வேண்டும் என நடிகர் மயில்சாமி வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக வந்த நடிகர் மயில்சாமி முன்பாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது, பேருந்து கட்டணம் இரட்டிப்பாக உயர்த்தப்பட்டதால் தமிழகம் முழுவதும் மக்கள் வருத்தத்துடன் பேசுவது மன வேதனையளிக்கிறது. 

அரசு மக்கள் மீது கட்டண உயர்வை திணிக்கிறது. முதலில் மக்களுக்கு நல்ல பேருந்துகளை இயக்க வேண்டும். மக்கள் கடுமையான வருத்தத்தில் உள்ளனர். ஆட்சியாளர்களுக்கு அரசை சரியான முறையில் கையாள தெரியவில்லை. அரசு என்பது மற்றொரு அரசுக்கு பணியக்கூடாது. ஆனால், தற்போது பணிகிறார்கள். எப்போது தேர்தல் வரும் என மக்கள் எதிர்பார்க்கிறார்கள்.

 கவிஞர் வைரமுத்து இரண்டாவது நாளே வருத்தம் தெரிவித்திருந்தார். ஆனால் அது அரசியலாக்கப்பட்டிருக்கிறது. ஆண்டாள் தனது தாய் என்று கூறிய பின்பும் தொடர்ந்து விமர்சிப்பது பைத்தியக்காரத்தனம். நடிகர் கமல்ஹாசன், கலாம் சமாதியிலிருந்து அரசியல் துவங்குவதை வரவேற்கிறேன். ரஜினி, கமல் அரசியலுக்கு வந்தால் மாற்றம் உருவாகும். அதே வேளையில், அவர்கள் மக்கள் மத்தியில் இறங்கி பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...