நீலகிரியில் இருந்து கோவை வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்வு: பொதுமக்கள் வேதனை

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

நீலகிரி, ஜனவரி 20

நீலகிரி மாவட்டத்தில் இருந்து அண்டை மாவட்டமான கோவைக்கு வருவதற்கான பேருந்துக் கட்டணம் ரூ. 85 ஆக உயர்ந்திருப்பதால், பொதுமக்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.

தமிழக அரசு நேற்று முன்தினம் திடீரென பேருந்து கட்டணத்தை உயர்த்தியது. இதனால், பேருந்து கட்டணம் 100 சதவீதம் உயர்ந்துள்ளது. இது பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறைந்தபட்ச கட்டணம் ரூ.5-லிருந்து ரூ.9 ஆக உயர்ந்துள்ளது. நீலகிரி மாவட்ட மக்கள் அலுவல், கல்வி, மருத்துவம் காரணமாக மக்கள் அருகில் உள்ள கோவை மாவட்டத்துக்கு தான் வர வேண்டும். உதகையிலிருந்து கோவைக்கு ரூ.53-லிருந்து கட்டணம் ரூ.85 ஆக உயர்ந்துள்ளது. இதனால், பொதுமக்கள், மாணவர்கள், தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



இது தொடர்பாக, சிஐடியு மாவட்ட செயலாளர் ஜெ.ஆல்துரை கூறும்போது, ‘கட்டண உயர்வு ஆண்டுக்கு ஒருமுறை சிறிது சிறிதாக ஏற்றியிருக்கலாம். ஆனால், தற்போது 100 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது, மக்கள் மீது அரசு சுமை ஏற்றியுள்ளது. குக்கிராமங்களில் உள்ள தோட்ட தொழிலாளர்கள், பழங்குடியின மக்கள், கூலி தொழிலாளிகள் கடுமையாகப் பாதிக்கப்படுவர். நீலகிரி மாவட்டத்தில் தனியார் போக்குவரத்தை ஊக்கவிக்கவே கட்டண உயர்வு வழி வகுக்கும். இதைக் கண்டித்து வரும் 25-ம் தேதி மறியல் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது’ என்றார்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் பாலகிருஷ்ணன் கூறியதாவது: நீலகிரி மாவட்டம் தேயிலை, காய்கறி விவசாயமே பிரதான தொழில். தோட்ட தொழிலாளர்கள் தான் அதிகம் வசிக்கின்றனர். இவர்கள் வேலை தேடி அண்டை மாநிலங்களுக்கும் செல்கின்றனர். தற்போது, பேருந்து கட்டணத்துக்கே பாதி வருவாய் சென்றுவிடும். போக்குவரத்து அமைச்சர் போக்குவரத்து துறையை சேவை துறையாக கொண்டுவர தனி தீர்மானம் கொண்டுவர வேண்டும். உயர்த்தப்பட்ட கட்டண உயர்வை அரசு திரும்ப பெற வேண்டும் என்றார்.

இந்தப் பேருந்து கட்டண உயர்வுக்கு பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், சாதாரண பேருந்துகளில் கூட விரைவுப் பேருந்துகளில் வசூலிக்கப்படும் கட்டணம் பெறப்படுவதால், பொதுநல வழக்கு தொடர நுகர்வோர்மன்றம் முடிவு செய்துள்ளது.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...