உதகையில் மந்தமாக நடக்கும் கழிவுநீர் கால்வாயை சீரமைக்கும் பணிகள்: வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் அவதி

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

கோவை, ஜனவரி 20

உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணிகள் மந்தமாக நடப்பதால், பாதசாரிகள் மற்றும் வாகன ஓட்டுநர்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர்.

நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்கா உலகளவில் புகழ்பெற்ற சுற்றுலாத்தலமாக திகழ்கிறது. இப்பூங்காவிற்கு ஆண்டுதோறும் இலட்சக் கணக்கான சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். இந்நிலையில், உதகை அரசு தாவரவியல் பூங்கா செல்லும் சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் உள்ளது. இச்சாலை வழியாக தாவரவியல் பூங்காவிற்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.

மழைக்காலங்கள் இந்த அலுவலக சாலையில் உள்ள பாதாள சாக்கடை நீர் கால்வாய் பழுதுகாரணமாக சாலையில் குளம் போல் மழைநீர் தேங்கி விடும். இதனால், வாகன ஓட்டிகள், சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி வந்தனர்.

இந்நிலையில், தற்போது இச்சாலையில் கழிவுநீர் கால்வாய் சீரமைக்கும் பணி துவக்கப்பட்டுள்ளது. இதற்காக, சாலை தோண்டப்பட்டு சீரமைப்பு பணி மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில், தோண்டப்பட்ட மண்களை நடைபாதையிலேயே கொட்டப்பட்டுள்ளது. மேலும், வாகனங்கள் சென்றுவர பெரும் இடையூறு ஏற்பட்டுள்ளது. மேலும், நடைபாதையில் மண் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது. பொதுமக்கள் சாலையில் நடந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளதால் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இதுபோன்ற பல இன்னல்களுக்கு மத்தியில், கடந்த 20 நாட்களுக்கும் மேலாக மந்த கதியில் நடைபெற்று வரும் இப்பணிகளை விரைந்து முடிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என உள்ளூர் மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...