பேருந்து கட்டண உயர்வை மறுபரிசீலனை செய்ய வேண்டும் : தமிழக அரசுக்கு எம்.பி. கனிமொழி வலியுறுத்தல்

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.

கோவை, ஜனவரி 20

பேருந்து கட்டண உயர்வை தமிழக அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என தி.மு.க. எம்.பி கனிமொழி வலியுறுத்தியுள்ளார்.



திருப்பூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த தி.மு.க. மாநிலங்களவை எம்.பி. கனிமொழி கோவை விமான நிலையத்தில் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், போக்குவரத்து துறையில் நஷ்டம் வருவதற்கு தமிழக அரசு ஒழுங்காக வேலை செய்யவில்லை என்பதே காரணம். ஆட்சியில் குழப்பம், ஊழல்களால் தான் போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டது. ஆட்சியாளர்கள் செய்த தவறுகளை மக்கள் மீது திணிப்பது சரியான நடவடிக்கையல்ல. 

சாமானிய மக்களால் இந்த உயர்த்தப்பட்ட கட்டணத்தை செலுத்த முடியாது. தமிழக அரசு இதை மறுபரீசிலனை செய்ய வேண்டும். ஒவ்வொரு கட்டத்திலும் மக்களுக்கு எதிரான நடவடிக்கையில் ஆட்சியாளர்கள் ஈடுபடுகின்றனர். என்றார். 

மேலும், போக்குவரத்து துறையில் இந்த நிலை ஏற்பட்டதற்கு தி.மு.க. காரணம் என்ற அமைச்சர் எஸ்.பி. வேலுமணியனின் குற்றச்சாட்டை மறுத்து அவர் பேசுகையில், தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகள் பேச்சுவார்த்தை நடத்தி் சரி செய்யப்பட்டது. தி.மு.க. ஆட்சியின் போது பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டது கிடையாது. 

டெல்லியில் மருத்துவ மாணவர்கள் மரணம் கவலை அளிக்கிறது. இரண்டு மருத்துவ மாணவர்கள் உயிரிழந்துள்ளது வருத்தம் அளிக்கக்கூடியது. சரத்பிரபுவின் உடலில் காயம் இருப்பதாக அவரது பெற்றோர் தெரிவித்து இருக்கின்றனர். இந்த விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். வெளிமாநிலங்களில் படிக்கும் தமிழக மாணவர்களுக்கு ஹெல்ப்லைன் உருவாக்கிக் கொடுக்க வேண்டும். இவ்வாறு கனிமொழி கூறினார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...