அரசு பேருந்து கட்டணம் உயர்வை திரும்பப் பெற முடியாது: போக்குவரத்து துறை அமைச்சர்

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

ஜனவரி 20

தமிழக அரசு அறிவித்துள்ள அதிரடி பேருந்து கட்டண உயர்விற்கு பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டதற்கு என்ன காரணம் என்பது குறித்து அமைச்சர் விஜயபாஸ்கர் விளக்கம் அளித்துள்ளார்.

கரூரில் செய்தியாளர்களிடம் அவர் பேசுகையில், நிதிச்சுமை காரணமாகவே பேருந்து கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. கட்டண உயர்வை மக்கள் பொறுத்துக் கொள்ள வேண்டும். மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடுகையில் இந்தியாவிலேயே தமிழகத்தில் பேருந்து கட்டணம் குறைவாகவே உள்ளது. 2000 ம் ஆண்டிற்கு பிறகு ஆந்திராவில் 16 முறையும், கேரளா மற்றும் கர்நாடகாவில் 6 முறையும் பேருந்துகட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழகத்தில் 2 முறை மட்டுமே உயர்த்தப்பட்டுள்ளது. நவீன வசதியுடன் கூடிய பேருந்துகளை இயக்கத் தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. 

கட்டணத்தை உயர்த்தியும் போக்குவரத்து துறைக்கு ஆண்டுக்கு ரூ.900 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. அதிக கட்டணம் வசூலிக்கும் தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். சென்னையில் 200 மின்சார பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட எந்த தேர்தல் வந்தாலும் அதனை எதிர்கொள்ள அதிமுக தயாராக உள்ளது. போக்குவரத்து துறைக்கு ரூ.1 வரவு வந்தால் ரூ.1.42 கோடி செலவு ஏற்படுகிறது. சுங்க கட்டணம் உள்ளிட்டவற்றால் ரூ.417 கோடி செலவு ஏற்படுகிறது. இதனால் டிக்கெட் கட்டணம் ரூ.1 உயர்த்தப்பட்டுள்ளது. 

போக்குவரத்து துறை தனியார் மயமாக்கப்படாது. போக்குவரத்து தொழிலாளர்களுக்கு அதிகப்படியாக ரூ.1,000 கோடி அளவிற்கு ஊதிய உயர்வு அளித்துள்ளோம். பேருந்துகட்டண உயர்வு தொடர்பான அரசியல் கட்சி தலைவர்களின் கருத்துக்கள் பரிசீலிக்கப்படும். எனினும் தற்போதைய நிலையில் பேருந்து கட்டண உயர்வை திரும்ப பெற முடியாது. பல்வேறு காரணங்களால் போக்குவரத்து துறையின் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...