ஜனவரி 28-ம் தேதி கோவை அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் தொடக்கம்

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது.

கோவை, ஜனவரி 19

கோவை அரசு மருத்துவமனையில் வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதி சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளது. 

பச்சிளம் குழந்தைகள் போலியோ நோயாக் தாக்கப்படுவதை தடுக்க ஆண்டுதோறும் ஜனவரி மற்றும் மார்ச் மாதங்களில் போலியோ சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. 

இந்தியாவில் இந்த மருந்து கடந்த 1995- ம் ஆண்டில் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. 

அதன்படி, வரும் 28 மற்றும் மார்ச் 11-ம் தேதியில் அரசு மருத்துவமனையில் போலியோ சொட்டு மருந்து முகாம் நடத்தப்பட உள்ளது. 

இது குறித்து அம்மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் கூறப்பட்டதாவது :- 

பொதுவாக சொட்டு மருந்து என்பது பிறந்து ஒன்றரை மாதம் ஆன குழந்தைகள் முதல் 5 வயதான குழந்தைகள் வரை கொடுக்கப்படுகிறது. 

ஆனால், போலியோ சொட்டு மருந்து ஆண்டிற்கு ஒருமுறை வழங்கப்படும் மருந்தாகும். இதை குழந்தைகள் அனைவருக்கும் கட்டாயமாக வழங்க வேண்டும். இந்த சொட்டு மருந்தால் எவ்வித பக்க விளைவுகளும் ஏற்படாது. 28-ம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை இந்த மருந்து வழங்கப்பட உள்ளது.

இந்த சொட்டு மருந்து தொடர்பாக பெற்றோர்களின் அச்சத்தைப் போக்க, மருந்து வழங்கிய அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு கூட்டம் அரசு மருத்துவமனையில் நடத்தப்படும். 

இந்தியாவில் கடந்த 4 ஆண்டுகளாக போலியோ பாதிப்பு இல்லாமல் இருப்பதற்கு காரணம் இந்த மருந்தாகவெர் உள்ளது. 

இவ்வாறு மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...