கூடலூரில் இயங்கி வரும் சல்லி கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆட்சியர் அலுவலகம் முற்றுகை

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நீலகிரி, ஜனவரி 19

கூடலூரில் இயங்கி வரும் சல்லிக் கலவை இயந்திரத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தினை முற்றுகையிட்ட ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.



நீலகிரி மாவட்டம், கூடலூர் அருகே உள்ள தேவாலா போக்கர் காலனி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த குடியிருப்புகளை ஒட்டி தனியார் சல்லிக் கலவை ஆலை செயல்பட்டு வருகிறது. இந்த ஆலையில் இருந்து வெளியேறும் சல்லி துகள்கள் மற்றும் கரும்புகையால் அப்பகுதி முழுவதும் காற்று மாசு ஏற்பட்டு குழந்தைகள் மற்றும் முதியோர்கள் சுவாசக் கோலாரால் பாதிக்கப்பட்டு வருவதாகக் கூறப்படுகிறது.



மேலும், அந்த ஆலையில் இருந்து வெளியேறும் ரசாயனம் கலந்த தூசி குடிநீரில் படிவதால் பல்வேறு நோய் தொற்று ஏற்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டினர்.

இது குறித்து பலமுறை புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகம் எவ்வித நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த அப்பகுதியைச் சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் இன்று நீலகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு தங்களது ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை மற்றும் வீட்டுச் சாவியை ஒப்படைக்க முற்பட்டனர்.

தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.

Newsletter

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...