ஒரு பள்ளிக்கு இரண்டே ஆசிரியர்கள் : மாணவர்களின் கல்வியை கேள்விக்குறியாக்கும் மாநகராட்சி நிர்வாகம்

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் 98 மாணவர்கள் பயிலும் மாநகராட்சி பள்ளி ஒன்றில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் இருப்பதாக மாணவர்களின் பெற்றோர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.

கோவை கரும்புக்கடையை அடுத்த சாரமேடு பகுதியில் மாநகராட்சி ஆரம்பப்பள்ளி செயல்பட்டு வருகிறது. கடந்த 1967-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தப் பள்ளியில் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை 98 மாணவர்கள் படித்து வருகின்றனர். தமிழ் மற்றும் ஆங்கில வழியில் பாடங்கள் கற்பிக்கும் வாயிலாக இப்பள்ளி தொடங்கப்பட்டது.

இந்நிலையில், இந்த பள்ளியில் தலைமையாசிரியர் மற்றும் ஒரு ஆசிரியர் என மொத்தமாகவே இரண்டு பேர் மட்டுமே பணியாற்றி வருவதாகப் புகார் எழுந்துள்ளது.



இது குறித்து மாணவர்களின் பெற்றோர்களில் ஒருவரான மோகனா என்பவர் கூறுகையில், "98 மாணவர்கள் பயிலும் பள்ளியில் மாநகராட்சி பள்ளியில் இரண்டே ஆசிரியர்கள் பணியில் உள்ளனர். தலைமையாசிரியர் பணி நிமித்தம் காரணமாக வெளியே சென்றுவிட்டால் ஒரேஒரு ஆசிரியர் மொத்த பள்ளியையும் நிர்வகிக்கும் சூழல் ஏற்படுகிறது. இதனால், குழந்தைகளின் கல்வி மற்றும் எதிர்காலம் பாதிக்கப்பட்டு வருகிறது. மேலும், இப்பள்ளியில் பிரத்தியேகமான சமையல் அறை இல்லை. இதனால், படிக்கட்டுகளின் கீழ் தான் சத்துணவு தயாரிக்கப்படுகிறது.

சிலை வைப்பதற்கும், விழா கொண்டாடுவதற்கும் ஆளும் அரசு பணத்தை செலவிட்டு வருகிறது. ஆனால், மாணவ, மாணவிகளின் வாழ்வுக்கு அடித்தளம் அமைக்கும் கல்விக்கு எந்த நலனையும் செய்ய தவறிவிட்டது.

எனவே, மாணவர்களின் நலன் கருதி உடனடியாக ஆசிரியர்களைப் பணி நியமனம் செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...

கோவை சாய்பாபா காலனியில் பஸ் டிரைவருக்கு மிரட்டல் : 2 வாலிபர்கள் கைது.

கோவை மேட்டுப்பாளையம் சாலையில்  உள்ள தனியார் கல்லூரி அருகே அரசு பேருந்தை தாக்கியதை தட்டிக்கேட்ட டிரைவரரை மிரட்டிய இரு வால...

இரயில்வே உதவி லோகோ பைலட் வேலைவாய்ப்புக்கு கோவையில் இலவச பயிற்சி வகுப்புகள் - கோவை ஆட்சியர் அறிவிப்பு

இரயில்வே தேர்வு வாரியம் 11,127 உதவி லோகோ பைலட் பணியிடங்களை அறிவித்துள்ளதை தொடர்ந்து, கோயம்புத்தூர் மாவட்ட வேலைவாய்ப்பு ம...

அரசு மருத்துவமனைகளில் மரியாதையுடன் தரமான சேவைகள் வழங்கப்பட வேண்டும் : அமைச்சர் டாக்டர் அருண்ராஜ் அறிவுரை.

சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான சுகாதார நலப்பணிகள் ஆய்வுக் கூட்டத்தில், மாநிலம் முழுவதும் உள்ள சுகாதார நலப்பணிகள், அரச...

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...