வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொன்று நகைகளை கொள்ளையடித்த வாலிபர் கைது

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

கோவை, ஜனவரி 19

கோவையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியை கொலை செய்து 15 பவுன் நகைகளை கொள்ளையடித்துச் சென்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

செல்வபுரம் தேவேந்திர வீதியில் வசித்து வந்தவர் இராமாயி அம்மாள் (77). கடந்த 9-ம் தேதி வீட்டில் தனியாக இருந்த இவரை மர்ம நபர் ஒருவர் கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 15 பவுன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றார். 

இந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இது தொடர்பாக செல்வபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளியைத் தேடி வந்தனர்.

தொடர்ந்து, சுண்டாக்காமுத்தூர் சாலை, புட்டுவிக்கி பாலம் அருகே போலீசார் வாகன சோதனை நடத்தினர்.

அப்போது, அங்கு இருசக்கர வாகனத்தில் வந்த வாலிபர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து, அவரிடம் விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளார். தொடர்ந்து, அவரை காவல் நிலையம் அழைத்துச் சென்ற போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது, அவர் செல்வபுரம் ஹவுசிங் யூனிட் பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் சேகர் பாபு (27) என்பதும், மூதாட்டி கொலையில் தொடர்பிருப்பதும் தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து, வழக்குப்பதிவு செய்த போலீசார் சேகர் பாபு-வை கைது செய்து சிறையிலடைத்தனர்.

Newsletter

பக்ரீத் பண்டிகை: பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது – இந்து மக்கள் கட்சி உயர்நீதிமன்றத்தில் வழக்கு

வரும் பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு, பொது இடங்களில் பசுவதை செய்யக்கூடாது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்து மக்கள் கட...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவையில் ‘“Army of Dheeran Annamalai” போஸ்டர்கள்; புதிய அரசியல் பரபரப்பு.

கோவையில் 2 நாள் பா.ஜ.க மையக்குழு கூட்டம் நடைபெற்று வந்த நிலையில், இன்று “Fearless Minds Have No Limits” என்ற வாசகத்துடன்...

கோவை மாவட்ட வனப்பகுதிகளில் புலிகள் கணக்கெடுப்பிற்கு தானியங்கி கேமராக்கள் நிறுவ பணி தொடக்கம்

கோவை மாவட்டத்தில் வால்பாறை, பொள்ளாச்சி, உலாந்தி மற்றும் மானாம்பள்ளி வனச்சரகங்களில் புலிகள் கணக்கெடுப்பிற்காக 350க்கும் ம...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் பழுது மற்றும் தூய்மை பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோயமுத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு 27 பீளமேடு பகுதியில் சூயஸ் குடிநீர் குழாய் பழுதுபார்க்கும் பணி மற்றும் பல்வ...

புது சித்தாபுதூர் ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண திருத்தேர் திருவிழா

கோவை புது சித்தாபுதூரில் உள்ள அருள்மிகு ஸ்ரீ பண்ணாரி மாரியம்மன் திருக்கோவிலில் 86ஆம் ஆண்டு திருக்கல்யாண ரதமஹோற்சவம் மற்ற...